Home> India
Advertisement

குஜராத்தில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார் ரூபானி

குஜராத்தில் ஆட்சி அமைக்க கவர்னரிடம் உரிமை கோரினார் ரூபானி

குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேல், கடந்த வாரம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். வயது மூப்பு காரணமாக தான் பதவியை ராஜினாமா செய்வதாக அவர் கூறி இருந்தார். இதனால் அவரது ராஜினாமாவை பா.ஜ., தலைமையும் ஏற்றுக் கொண்டது.

குஜராத்தின் புதிய முதல்வரை தேர்வு செய்வதற்காக பலகட்டங்களாக ஆலோசனை நடத்தி வந்த பா.ஜ., தலைமை, குஜராத்தின் அடுத்த முதல்வராக விஜய் ரூபானியை தேர்வு செய்வதாக நேற்று மாலை அறிவித்தது. இதனையடுத்து குஜராத் முதல்வரை விஜய் ரூபானி மற்றும் அவரது எம்.எல்.ஏ.,க்கலள் கவர்னரிடம் ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். 

பா.ஜ., தலைமையிடம் ஆலோசனை செய்த பிறகு விஜய் ரூபானி தனது பதவியேற்பு விழாவை எப்போது நடத்துவது என்பதை முடிவு செய்வார் என கூறப்படுகிறது.

Read More