Home> India
Advertisement

பாரமுல்லா என்கவுண்டர்: பாதுகாப்புப்படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டார்!

பாரமுல்லா என்கவுண்டர்: பாதுகாப்புப்படையினரால் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தீவிரவாதி ஒருவன் கொல்லப்பட்டார்!

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் சோப்போர் அருகே, மல்மன்போரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் இந்திய இராணுவத்தின் மற்றும் CRPF குழு இப்பகுதியில் ஒரு வளைவு மற்றும் தேடுதல் நடவடிக்கையைத் தொடங்கியது. படைகள் அந்த இடத்தை நெருங்கியபோது, அந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருவதாகவும் விசாரணையில் தெரியவந்தது. 

பாரமுல்லா மாவட்டம் சோப்போர் (Sopore) அருகே, மல்மன்போரா (Malmanpora) பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், பாதுகாப்பு படையினர் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ராணுவம், சிஆர்பிஎஃப் மற்றும் போலீஸார் இணைந்து சம்மந்தப்பட்ட பகுதியை சுற்றிவளைத்தனர். அப்போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டத்தைத் தொடர்ந்து இருதரப்புக்கும் இடையே சண்டை மூண்டது.

இதில் ராணுவ வீரர் காயமடைந்தார். தீவிரவாதிகளில் ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். பதுங்கியிருக்கும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

Read More