Home> India
Advertisement

யானையிடம் சிக்கிய சிறுவனை மீட்க போராடிய தந்தை - பதபதைக்க வைக்கும் வீடியோ

உணவு கொடுக்கச் சென்ற சிறுவனை யானை துதிக்கையால் தூக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.   

யானையிடம் சிக்கிய சிறுவனை மீட்க போராடிய தந்தை - பதபதைக்க வைக்கும் வீடியோ

கேரள மாநிலம் மலப்புரம் கீழபறம்பு பகுதியை சேர்ந்தவர் நாசர்.  அவர் தன் வீட்டில் யானை ஒன்றை வளர்த்து வருகிறார். அந்த யானைக்கு அன்றாடம் உணவு கொடுக்கும் நாசர், அண்மையில் தனது 4 வயது மகனை அழைத்துச் சென்று உணவு கொடுக்க வைத்துள்ளார். சிறுவனும் தயங்காமல் யானைக்கு அருகே சென்று உணவு கொடுத்துள்ளார். 

மேலும் படிக்க | என்ன அண்ணே... என் ரூட்ல கிராஸ் பண்ணறீங்க; எச்சரிக்கும் யானையின் வைரல் வீடியோ

அப்போது, திடீரென மிரண்ட யானை, சிறுவனை துதிக்கையால் சுற்றிவளைத்து தூக்கியது. இதனை நாசர் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உடனே, தட்டுத் தடுமாறி யானையிடம் சிக்கிய மகனை மீட்டார். உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் நடந்த நிகழ்வின் வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

அந்த வீடியோவில், நாசர் தன் மகனை யானையிடம் தூக்கிச் செல்கிறார். உணவைக் கொண்டு யானையின் அருகே செல்லும் சிறுவன் உணவைக் கொடுக்கிறான். அப்போது, யானை சிறுவனை சுற்றி வளைத்து தூக்க முற்படுகிறது. அருகில் இருந்த நாசர் யானையுடன் போராடி சிறுவனை மீட்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த வீடியோ இப்போது தான் வெளியாகியுள்ளது. சமூக வலைதளங்களிலும், வாட்சப்களிலும் வைரலாகியுள்ளது.  

மேலும் படிக்க | தவறி விழும் குழந்தையை காப்பாற்றும் பூனை -வைரல் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More