Home> India
Advertisement

2019 மக்களவை தேர்தல் எப்பொழுது? ஓரிரு நாட்களில் அறிவிப்பு -தேர்தல் ஆணையம்

ஏப்ரல்-மே மாதங்களில் ஏழு, எட்டு கட்டங்களில் நடைபெறவிருக்கும் லோக்சபா தேர்தல்களின் தேதி அறிவிக்கப்படும். ஆதாரங்கள் வியாழக்கிழமை இந்த கூறினார்

2019 மக்களவை தேர்தல் எப்பொழுது? ஓரிரு நாட்களில் அறிவிப்பு -தேர்தல் ஆணையம்

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு கடைசியாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. ஐந்து ஆண்டுகள் முடிவடைய உள்ளதால், பொதுத்தேர்தல் நடத்த தேர்தல் ஆனையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறது. தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தியது.

17_வது மக்களவைத் தேர்தல் நடத்துவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளை முடியும் தருவாயில் உள்ளது. இதனால் இந்த வாரத்தின் இறுதியில் 2019 மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிப்பு வெளியாகும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

2019 மக்களவை தேர்தல் ஏழு, எட்டு கட்டங்களாக ஏப்ரல்-மே மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் ஆந்திரா, ஒடிசா மற்றும் அருணாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றம் வரும் ஜூன் மாதம் முடிவடைகிறது. அதேபோல சிக்கிம் சட்டமன்றமும் மே மாதத்தில் முடிவடைகிறது. எனவே இந்த மாநிலங்களுக்கும் சட்டசபை தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த ஆண்டு நவம்பரில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநில சட்டசபை கலைக்கப்பட்டது. எனவே இந்த மாநிலத்திலும் சட்டசபை தேர்தல் நடத்த ஆலோசனை செய்யப்படுகிறது. ஆனால் ஜம்மு காஷ்மீரில் தேர்தல் நடத்துவது என்பது, மாநிலத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தன்மையை சார்ந்துள்ளது.

Read More