Home> India
Advertisement

திருமணத்திற்கு மறுத்த காதலியின் மகனை கடத்திய காதலன்!

தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த டெல்லி பெண்ணின் மகனை, அவரது காதலரே கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

திருமணத்திற்கு மறுத்த காதலியின் மகனை கடத்திய காதலன்!

தன்னை திருமணம் செய்துக்கொள்ள மறுத்த டெல்லி பெண்ணின் மகனை, அவரது காதலரே கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!

டெல்லியின் மது விகார் பகுதியே சேர்ந்தவர் சாஜி, கடந்த 2 நாட்களா இவரது மனகனை காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்துள்ளார். மேலும் தன் 4 வயது மகனை சிவ குமார் என்பவர் கடத்திருக்கலாம் என புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண் காவல்துறையினர், கடத்தப்பட்ட சிறுவனுடன் சிவ குமார் கொன்னக்கட் பகுதியில் இருப்பது தெரியவந்துள்ளது. பின்னர் அப்பகுதியில் வைத்தே இருவரையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

பின்பு விசாரணையில், குற்றம்சாட்டப்பட்ட சிவகுமார் சிறுவனின் தாயை திருமணம் செய்துக்கொள்ள விரும்பியதாவும், அதற்காக சிறுவமை கடத்தி தாயை மிரட்டியதாகவும் தெரிகிறது. 

கடத்தல் சம்பவத்தன்று சிறுவனின் வீட்டிற்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவிக்க சென்ற சிவகுமார், அங்கிருந்து சிறுவனை கடத்திச்சென்றுள்ளார். பின்னர் கொல்கத்தாவிற்கு சிறுவனை கடத்திச்செல்ல முயற்சித்ததாகவும் தெரிகிறது. ஆனால் இந்த திட்டத்திற்கு முன்னதாகவே சிவகுமார் பிடிப்பட்டுள்ளார்.

Read More