Home> India
Advertisement

INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3ம் தேதி வரை சிறை நீட்டிப்பு

அக்டோபர் 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவு.

INX மீடியா வழக்கில் ப.சிதம்பரத்துக்கு அக்டோபர் 3ம் தேதி வரை சிறை நீட்டிப்பு

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் 14 நாட்கள் சிறைவாசம் முடிந்து, இன்று மீண்டும் சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ஆனால் அவருக்கும் மீண்டும் வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை சிறைகாவலை நீட்டித்து உத்தரவிட்டது. எனக்கு முதுகுதண்டு வலிக்கிறது. மிகவும் சிரமம் ஏற்படுவதால், ஜாமீன் வழங்க வேண்டும் என சிதம்பரம் கூறினார்.

ஐஎன்எக்ஸ் மீடியா தொலைக்காட்சி நிறுவனம் 2007 ஆம் ஆண்டில் 305 கோடி ரூபாய் அந்நிய முதலீடு பெற்றதில் விதிகள் மீறப்பட்டதாகவும், அப்போதைய நிதியமைச்சர் ப. சிதம்பரம் அதற்கு உதவி செய்ததாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அமைப்பு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 21 ஆம் தேதி இரவு ப. சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. 

அடுத்த நாள் அவரை சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தினர். 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனையடுத்து மீண்டும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டார் ப. சிதம்பரம், மேலும் 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மீண்டும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி 2 நாள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து கடந்த திங்கக்கிழமை மீண்டும் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ப. சிதம்பரம் ஆஜார்படுத்தப்பட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிமன்றம் செப்., 5 ஆம் தேதி வரை சிபிஐ காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. 

15 நாள் சிபிஐ காவல் முடிந்ததால், ப.சிதம்பரத்தை மீண்டும் செப்., 5 ஆம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அன்று ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை செப்டம்பர் 19 வரை நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்க உத்தரவு போட்டது. ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தின் உத்தரவு அடுத்து ப.சிதம்பரத்தை திகார் சிறையில் அடைக்கப்பட்டார். 

இந்தநிலையில், இன்று நீதிமன்ற காவல் முடிந்ததால் மீண்டும் அவரை ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். ப.சிதம்பரத்தை ஜாமீனில் வெளியே அனுப்ப வேண்டும். அவரின் உடல்நிலை சரியில்லாததால், சிறைக்கு அனுப்பக்கூடாது என்று ப.சிதம்பரம் தரப்பு கோரிக்கை வைத்தது. சிபிஐ தரப்பில் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, வரும் அக்டோபர் 3 ஆம் தேதி வரை ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

Read More