இஸ்ரோவின் மைல்கல் சந்திரயன் 2-யின் இருபது மணிநேர கவுண்டன் துவங்கியது.!!
லவின் தென்துருவ பகுதியை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திராயன் -2 விண்கலம் நாளை அதிகாலை விண்ணில் ஏவப்பட உள்ளது. இதற்கான 20 மணிநேர கவுன்ட்டவுன் இன்று காலை 6.51 மணிக்கு தொடங்கியது.
#ISROMissions
— ISRO (@isro) July 14, 2019
The launch countdown of #GSLVMkIII-M1/#Chandrayaan-2 commenced today at 0651 Hrs IST. The launch is scheduled at 0251Hrs IST on July 15th.
More updates to follow...
உலக நாடுகளிலேயே முதல்முறையாக நிலவின் தென்துருவ பகுதிகளை ஆராயும் முயற்சியில் இந்தியா இறங்கி உள்ளது. இதற்காக சந்திராயன்-2 விண்கலத்தை இந்தியா உருவாக்கி வந்தது. இந்நிலையில் இறுதிகட்ட பணிகள் முடிந்த நிலையில் சந்திராயன் 2 விண்கலதை விண்ணில் ஏவ இந்தியா தயாராகி வருகிறது. நாளை அதிகாலை 2.51 மணியளவில் 3850 கிலோ எடைகளுடன் சந்திராயன்-2 விண்கலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட உள்ளது.
#ISROMissions #Chandrayaan2
— ISRO (@isro) July 14, 2019
Propellant filling of liquid core stage (L110) of #GSLVMkIII-M1 is in progress.
Updates to continue..
இதற்கான கவுன்ட் டவுன் காலை 6.51 மணிக்கு தொடங்கியது. சந்திரயான்-2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவ ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் பயன்படுத்தப்படவுள்ளது. வெற்றிகரமான விண்ணில் ஏவப்பட்ட உடன், இரண்டு மாத பயணங்களுக்கும் பின் சந்திராயன் -2 நிலவின் தென் துருவப் பகுதியை அடையும். 3.84 லட்சம் கிலோமீட்டர் பயணம் செய்து நிலவை அடையப்போகிறது சந்திராயன் 2. இந்த சந்திராயன் 2 திட்டத்தை செயல்படுத்த 978 கோடி ரூபாயை இந்தியா செலவழித்துள்ளது. இதுவரை எந்த விண்கலமும் கால் பதிக்காத இடத்தை சந்திராயன் - 2 தனது தடத்தை பதிக்க உள்ளதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியுள்ளது.