Home> India
Advertisement

Lok Sabha Election Result 2024: பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான்... காங்கிரஸ் பக்கம் சாய்வாரா...?

Lok Sabha Election Result 2024: மத்தியில் ஆட்சியமைக்க ஆந்திராவில் அதிக இடங்களை கைப்பற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவைப்படும். அவர்தான் இந்த தேர்தலில் Kingmaker ஆகும் வாய்ப்புள்ளது. 

Lok Sabha Election Result 2024: பிரதமரை தீர்மானிக்கப்போகும் King Maker இவர் தான்... காங்கிரஸ் பக்கம் சாய்வாரா...?

Lok Sabha Election Result 2024: 18ஆவது மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வரும் சூழலில், அனைத்து தொகுதிகளின் முன்னிலை நிலவரமும் வந்துகொண்டிருக்கின்றன. பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி 290+ தொகுதிகளையும், இந்தியா கூட்டணி 220+ தொகுதிகளையும் தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது.

வாக்கு எண்ணிக்கை முழுமையாக நடைபெற்றால் மட்டுமே வெற்றி, தோல்வி உறுதியாகும் என்றாலும் சில கட்ட முன்னிலை நிலவரங்களின் மூலம் யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்பதை சொல்லிவிட முடியும். தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மட்டும் 230+ தொகுதிகளிலும், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 100+ தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கின்றன.

முன்னேறும் காங்கிரஸ், பின்தங்கும் பாஜக!

எனவே, ஒரு கட்சிக்கு தனிப்பெரும்பான்மை கிடைப்பது அரிது என்பதால் கூட்டணி ஆட்சி அமையும் எனலாம். கடந்த 2014ஆம் ஆண்டில் பாஜக 282 தொகுதிகளையும், 2019இல் 303 தொகுதிகளையும்  தனியே கைப்பற்றி ஆட்சியமைத்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. காங்கிரஸை விட பாஜக அதிக தொகுதிகளை பெற்றிருக்கும்பட்சத்தில், ஆட்சியமைக்க பாஜகவிடமே அழைப்புவிடுக்கப்படும். இருப்பினும், பாஜக கடந்த 2 முறை போல் இல்லாமல் இந்த முறை கூட்டணியின் தயவால் ஆட்சியமைக்க வேண்டும் என்பதால் சற்று பலமிழந்து காணப்படும் எனலாம்.

மேலும் படிக்க | Telangana Lok Sabha Elections 2024 Result : தெலங்கானாவில் வெற்றி யார் பக்கம்? முன்னணியில் பாஜக! பிஆர்எஸ் நிலை என்ன?

மறுபுறம் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு வெற்றிகரமான தோல்வி எனலாம். கடந்த இரண்டு தேர்தல்களில் முறையே 44, 52 தொகுதிகளை மட்டுமே வென்ற காங்கிரஸ் இம்முறை இவ்வளவு அதிகமான தொகுதிகளை கைப்பற்றுவதற்கு அக்கட்சி களத்தில் மேற்கொண்ட பணிகளே காரணம். ஆட்சியமைக்க தவறினாலும் அக்கட்சி வலிமையான எதிர்க்கட்சியாக மக்களவையில் அமரும் என எதிர்பார்க்கலாம். 

கிங்மேக்கர் இவர்தான்...

தற்போதைய சூழலில் ஆந்திரா மாநிலம் மத்தியில் ஆட்சியை தீர்மானிக்கும் ஒரு மாநிலமாக திகழ்கிறது. தற்போது தெலுங்கு தேசம் கட்சி 15 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. எனவே, தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபுதான் தற்போதைய சூழலில் கிங் மேக்கர் எனலாம். பாஜக ஆட்சியமைக்க அந்த கட்சியின் ஆதரவு நிச்சயம் தேவை. மேலும், ஆந்திரா சட்டப்பேரவை தேர்தலிலும் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு முன்னிலை பெற்றுள்ளது. 

ஒருவேளை, காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி ஆட்சியமைக்கிறது என்றாலும் நிச்சயம் சந்திரபாபு நாயுடுவின் ஆதரவு தேவைப்படும். ஆனால் ஆந்திரா சட்டப்பேரவையில் ஆட்சியமைக்கும்போது அவர் பாஜக கூட்டணியில் இருந்து வெளிவர வாய்ப்பே இல்லை என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மேலும் படிக்க | Jharkhand Lok Sabha Election Results 2024: ஜார்கண்ட் மாநில முன்னணி நிலவரம்..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More