Home> India
Advertisement

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பர்ட்... அகவிலைப்படி 5 % உயர்வு!!

1.12 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், அன்பளிப்பு கொடுப்பனவை 5 சதவீதம் உயர்த்தியுள்ளது அரசு!!

மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பர்ட்... அகவிலைப்படி 5 % உயர்வு!!

1.12 கோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பயனளிக்கும் வகையில், அன்பளிப்பு கொடுப்பனவை 5 சதவீதம் உயர்த்தியுள்ளது அரசு!!

தீபாவளி விழாக்களுக்கு முன்னதாக, மத்திய அமைச்சரவை புதன்கிழமை மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான ஜூலை-டிசம்பர் 2019 காலத்திற்கான அன்புள்ள கொடுப்பனவு (DA) 5 சதவீதம் உயர்த்தி அறிவித்துள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்போது 12 சதவீதம் அளவுக்கு அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது. அடிப்படை ஊதியத்தில் இருந்து 12 சதவீதம் கணக்கிடப்பட்டு அகவிலைப்படி வழங்கப்படுகிறது. பணவீக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்காக ஊழியர்களுக்கான அகவிலைப்படியை மத்திய அரசு அதிகரிப்பது வழக்கம். அந்த வகையில், தற்போது ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 12 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாக உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இதுவரை இல்லாத அளவுக்கு 5 சதவீதம் என்ற அளவில் அகவிலைப்படி உயர்த்தப்படுவதாக அறிவித்தார். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பலன் அடைவார்கள் என்றும், அரசுக்கு கூடுதலாக 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவு ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படியானது ஜூலை மாதம் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகள் நிறைந்த மாதத்தில் அகவிலைப்படி குறித்த அறிவிப்பு வெளியாகி இருப்பது மத்திய அரசு ஊழியர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. இது மட்டும் அல்லாமல், இதுவரை அகவிலைப்படி உயர்வானது 1,2,3 சதவீதம் வரை மட்டுமே உயர்த்தப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக 5 சதவீதம் உயர்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

Read More