Home> India
Advertisement

மும்பையில் ஆயுதங்களுடன் மர்மநபர்கள் -கடற்படை உஷார்

மும்பையில் ஆயுதங்களுடன் மர்மநபர்கள் -கடற்படை உஷார்

மும்பையில் ஆயுதங்களுடன் மர்ம நபர்கள் காணப்பட்டதை தொடர்ந்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது

மும்பை கடற்படை தளம் அருகே கருப்பு நிற உடையில் மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் திரிவதை பார்த்ததாக பள்ளி மாணவர்கள் கூறியுள்ளனர், இதனையடுத்து பாதுகாப்பு உஷார் படுத்தப்பட்டு உள்ளது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உரான் கடற்படை தளம் அருகே யுஇஎஸ் பள்ளி மாணவர்கள் சந்தேகத்திற்கு மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் திரிவதாக கூறியுள்ளனர். இதனையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

மாணவர்கள் சந்தேகத்திற்கு இடமான 5 பேர் கருப்பு நிற உடையில், நீண்ட ஆயுதங்களுடன் சென்றனர் என்று கூறியுள்ளனர். அவர்கள் முதுகில் பெரிய பேக்கையும் தொங்க விட்டு இருந்தனர் என்று மாணவர்கள் கூறியுள்ளனர். 

இதனையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடற்படை ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளது. தீவிர கண்காணிப்பின் கீழ் அப்பகுதி கொண்டுவரப்பட்டு உள்ளது என்று தகவல்கள் தெரிவித்து உள்ளன. 

கடந்த 2008-ம் ஆண்டு கடல்வழியாக ஊடுருவிய லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் மும்பையில் நடத்திய தாக்குதலில் 166 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Read More