Home> India
Advertisement

பூஸ்டர் டோஸ்: 18+ வயதினருக்கு அனுமதி; தடுப்பூசி கட்டணம் மற்றும் பிற விபரம்


கோவிட் தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் இன்று முதல் நாட்டின் தனியார் மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போடப்படும். 

பூஸ்டர் டோஸ்: 18+ வயதினருக்கு அனுமதி; தடுப்பூசி கட்டணம் மற்றும் பிற விபரம்

கொரோனா தொற்று குறைந்திருந்தாலும், இன்னும்முழுமையாக நீங்கவில்லை.  இதுவரை கொரோனா வைரஸின் பல வகைகள் வந்துள்ளன. தற்போது, ​​XE மாறுபாடு குறித்து பெரிதும் பேசப்படுகிறது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் பூஸ்டர் டோஸ் வழங்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதாவது, இப்போது வயது வந்தோர் தனியார் மையத்திற்குச் சென்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி பெறலாம். தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்கள் செலுத்தப்பட்ட நிலையில்,  அதே தடுப்பூசியை பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ்களாக செலுத்திக் கொள்ளலாம். 

அதே சமயம், 9 மாதங்களுக்கு  முன்னதாக இரண்டாவது டோஸ் தடுப்பூசியை போட்டுக் கொண்டவர்கள், இந்த மூன்றாவது தடுப்பூசிக்கு மட்டுமே தகுதியுடையவர்கள். அதாவது, 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரண்டாவது டோஸ் செலுத்திக் கொண்டு  9 மாதங்கள் ஆன அனைவரும் பூஸ்டர் டோஸ் பெற தகுதியானவர்களாகக் கருதப்படுவார்கள்.

மேலும் படிக்க | NVX-CoV2373: குழந்தைகளுக்கான Novovax தடுப்பூசிக்கு DCGI அனுமதி..!!

இருப்பினும், அரசு மையங்களில் முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களைத் தவிர, சுகாதாரப் பணியாளர்கள், முன்னணிப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் முன்பு போலவே முன்னெச்சரிக்கை மருந்தைப் பெறுவார்கள்.

தடுப்பூசி நிறுவனங்கள் விலையை குறைத்தன

தனியார் மருத்துவமனைகளில் 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு மூன்றாவது டோஸ் தடுப்பூசி போடும் முன் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள், மத்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தடுப்பூசிகளின் விலையை குறைத்துள்ளன. 

இப்போது தனியார் மருத்துவமனைகள் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் இரண்டையும் ஒரு டோஸுக்கு ரூ.225 என்ற விலையில் கிடைக்கும். மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி, தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசியின் ஒரு டோஸ் விலையுடன் சேர்த்து ரூ.150 வரை சேவைக் கட்டணமாக வசூலிக்க முடியும். இந்நிலையில், மூன்றாவது டோஸ் தடுப்பூசி போட்ட 18 முதல் 59 வயதுடையவர்கள், தனியார் மருத்துவமனைகளில் மூன்றாவது டோஸுக்கு அதிகபட்சமாக ரூ.375 செலுத்த வேண்டும்.

இதுவரை தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்டு மருந்திற்கு 700 முதல் 750 ரூபாய் வரையிலும், கோவாக்சின் மருந்திற்கு 1250 முதல் 1300 ரூபாய் வரையிலும் கட்டணம் செலுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய சுகாதார அமைச்சகத்தின் தரவுகளின்படி, நாட்டில் இதுவரை 185.68 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில், 15 வயதுக்கு மேற்பட்டவர்களில் 96% பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் எடுத்துள்ளனர். அதே நேரத்தில், சுமார் 2.5 கோடி பேர் முன்னெச்சரிக்கை மருந்துகளையும் பெற்றுள்ளனர். இதேபோல், நாட்டில் 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 45% பேருக்கு ஏற்கனவே முதல் டோஸ் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

போர்டிஸ் மற்றும் மேக்ஸ் போன்ற பல தனியார் மருத்துவமனைகளில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு பூஸ்டர் டோஸ் இனி கிடைக்காது. அதே நேரத்தில், அப்பல்லோ மருத்துவமனையில் இந்த வசதி ஏப்ரல் 11 திங்கட்கிழமை முதல் தொடங்கும். இது கொரோனா தடுப்பூசியின் கூடுதல் டோஸ், முன்னெச்சரிக்கை டோஸ் அல்லது பூஸ்டர் டோஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்த டோஸ் கொரோனா வைரஸுக்கு எதிராக மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் படிக்க | அதிசயம் ஆனால் உண்மை! ‘இந்த’ நாடுகளில் நுழைய முடியாமல் கொரோனா தோற்று போனது!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More