Home> India
Advertisement

அஹமதாபாத் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

அஹமதாபாத் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்!

அஹமதாபாத் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைப்பதாக மர்ம நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு குழு பரிசோதனை நடத்தினர்.

இச்சம்பவம் குறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில், அதிகாரப்பூர்வமற்ற கடிதம் ஒன்று தங்களுகு வந்ததாகவும், அதன் அடிப்படையிலேயே வெடிகுண்டு மீட்பு குழு வரவைக்கப் பட்டதாகவும் தெரிவித்தனர். 

அஹமதாபாத் ரயில் நிலையத்தில் இருந்த பயணிகள், வெடிகுண்டு அச்சுறுத்தலுக்குப் பின் அப்பகுதியில் இருந்து உடனடியாக அகற்றப்பட்டனர். 

வெடிகுண்டு மீட்பு குழுவானது, வெடிகுண்டு கண்டறியும் அலகு மற்றும் துப்பாக்கிகள் மற்றும் நாய்களுடன். சந்தேகத்திற்கிடமான இடங்களை பரிசோதித்தனர். 

குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!

Read More