Home> India
Advertisement

கேரளாவில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் கைது!

கேரளாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவ இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கேரளாவில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடையவர் கைது!

கேரளாவில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவ இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் ஈஸ்டர் பண்டிகை நாளன்று பிரார்த்தனை நடைபெற்ற தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளை குறிவைத்து பயங்கரவாதிகள் தற்கொலைத் தாக்குதல்களை நடத்தினர். இதில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர் தேசிய தவ்ஹீத் ஜமாத் தலைவரான ஜஹ்ரான் ஹாஷிம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்நிலையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய  29 வயது இளைஞர் கேரளாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ரியாஸ் அபூபக்கர் என்ற இளைஞரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பு வைத்ததும், கேரளாவில் தற்கொலை தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்ததும் தெரியவந்துள்ளது. 

அத்துடன் ஜஹ்ரான் ஹாஷிமின் பேச்சுகளை ஒரு வருடத்திற்கும் மேலாக ரியாஸ் அபூபக்கர் தொடர்ச்சியாக கேட்டு பின்பற்றி வந்தது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ரியாஸ் அபூபக்கர் தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

Read More