Home> India
Advertisement

இந்தியாவின் பாதுகாப்பும், மக்களின் நலனும் தான் அரசின் முன்னுரிமை!

இந்தியாவின் பாதுகாப்பும், நட்டு மக்களின் நலனும் தான் மோடி அரசின் முன்னுரிமை என அமித்ஷா தெரிவித்துள்ளார்!!

இந்தியாவின் பாதுகாப்பும், மக்களின் நலனும் தான் அரசின் முன்னுரிமை!

இந்தியாவின் பாதுகாப்பும், நட்டு மக்களின் நலனும் தான் மோடி அரசின் முன்னுரிமை என அமித்ஷா தெரிவித்துள்ளார்!!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா வெற்றி பெற்றதை அடுத்து, நேற்று முன்தினம் நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக பிரதமர் மோடி  பதவியேற்றார். தொடர்ந்து, அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்களும் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இதன் தொடர்ச்சியாக நேற்று மக்களவையில் இடம்பெறும் அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கப்பட்டன. அதன்படி, மத்திய உள்துறை அமைச்சராக அமித் ஷா நியமிக்கப்பட்டார். தொடர்ந்து அவர் இன்று அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமித்ஷா கூறுகையில்; நாட்டின் பாதுகாப்பும் மக்களின் நலனும் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியின் கொள்ளை என்றார்.

மேலும், எனக்கு அளிக்கப்பட்ட இந்த பதவிக்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணியை சிறப்பாக செய்வேன் என்றார்.

 

Read More