ஸ்ரீநகர்: பனி வடிவில் அமர்நாதில் (Amarnath) குடிகொண்டிருக்கும் பரமேஷ்வரனின் பக்தர்களுக்கு (Devotees) நற்செய்தி. அமர்நாத் புனித யாத்திரை (Pilgrimage) ஜூலை 21 (July 21) முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜம்மு காஷ்மீரின் LG ஜி.சி முர்மு சிவபெருமானுக்கு வழக்கமான பூஜைகளை செய்தார். இதையடுத்து, அமர்நாத் சிவலிங்கத்தின், இவ்வாண்டின் முதல் காட்சிகள் வெளி வந்துள்ளன. இதுமட்டுமல்ல, இம்முறை சிவபெருமானே பக்தர்களுக்கு தரிசனம் அளிக்க பக்தர்களின் இல்லங்களுக்கே வருகிறார். இன்று முதல் அமர்நாதின் புனித குகையில் தீபாராதனை ஆரதி மற்றும் பிற பூஜைகள் துவங்கி விட்டன. இது முதன்முறையாக தூர்தர்ஷனில் (Doordarshan) ஒளிபரப்பப்பட்டது.
ALSO READ: அமர்நாத் பனிலிங்க ஆரத்தியை வீட்டிலிருந்தே காணலாம்
அமர்நாத் புனித யாத்திரைக்கான ஏற்பாடுகளை நிர்வாகம் விரைவுபடுத்தி வருகிறது. ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்தின் படி:
ஜம்மு காஷ்மீரின் தலைமைச் செயலர் பி.வி.ஆர் சுப்பிரமணியம், இந்த யாத்திரை குறித்த ஏற்பாடுகளை செய்து பணிகளை மேற்பார்வையிட்டு வருகிறார். அவர், வேல்ப்லிக் நீல்க்ரத் சாலை வழி முதல் பால்டால் வரை நடக்கும் பணிகளையும் ஆய்வு செய்து வருகிறார். யாத்திரை சாலையில் பணியில் இருக்கும் மருத்துவர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு நிர்வாகம் பிபிஇ கிட்டுகளையும் தேவையான மற்ற வசதிகளையும் செய்துள்ளது. இவ்வாண்டு அமர்நாத் புனித யாத்திரை ஜூன் 23 அன்று துவங்கவிருந்தது. ஆனால், கொரோனா தொற்று காரணமாக இது தாமதிக்கப்பட்டது.