Home> India
Advertisement

ஏர் இந்தியா விற்பனை முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது: சுப்ரமணியன் சுவாமி

ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்!!

ஏர் இந்தியா விற்பனை முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது: சுப்ரமணியன் சுவாமி

ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்!!

டெல்லி: தேசிய கேரியர் ஏர் இந்தியாவின் 100 சதவீத பங்குகளை விற்பனை செய்வதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கையை அவதூறு செய்வதில் பாஜக MP சுப்பிரமணியன் சுவாமி எதிர்க்கட்சி குழுவில் இணைந்துள்ளார். மோடி அரசிடம் பணம் இல்லை என்றும் அது அனைத்து சொத்துக்களையும் விற்கிறது என்றும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

ஏர் இந்தியாவின் 100 சதவிகித பங்குகளையும் இந்திய தனியார் நிறுவனங்களுக்கு விற்று விட முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதற்கான விருப்பத்தை அந்நிறுவனங்கள் தெரிவிக்க வரும் மார்ச் 17 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளது.   

ஏர் இந்தியா நிறுவனம் சுமார் ரூ.80,000 கோடி கடனில் உள்ளது. தினசரி 20 முதல் 25 கோடி ரூபாய் வரை இழப்புடன் இயங்கி வரும்  ஏர் இந்தியாவை தனியாருக்கு விற்று விட மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. அதை வாங்க நினைக்கும் நிறுவனங்கள் வரும் மார்ச் 17 ஆம் தேதிக்குள் விருப்ப விண்ணப்பத்தை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு தன் வசம் உள்ள ஏர் இந்தியாவின் பங்குகளில் 76 சதவிகிதத்தை தனியாருக்கு விற்கும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. ஆனால் அதற்கு யாரும் ஆர்வம் காட்டாததை தொடர்ந்து 100 சதவிகித பங்குகளையும் விற்று விட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏர் இந்தியாவுக்கு இருக்கும் சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உள்ளிட்ட இதர சுமைகளையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ளும் எந்த அறிவிப்பும் சேர்ந்து வெளியாகி இருப்பதால், ஏர் இந்தியாவை வாங்க தனியார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஏர் இந்தியாவை வாங்க  டாடா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட நிறுவனங்கள் ஆர்வம் காட்டி இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

fallbacks

fallbacks

இந்நிலையில், ஏர் இந்தியாவை தனியார்மயமாக்கும் முயற்சி முழுக்க முழுக்க தேசவிரோதமானது என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டர் பதிவில்; "ஏர் இந்தியா முதலீட்டு செயல்முறை இன்று மீண்டும் தொடங்குகிறது. இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க தேசவிரோதமானது, நான் நீதிமன்றத்திற்குச் செல்ல கட்டாயப்படுத்துவேன். நாங்கள் எங்கள் குடும்ப சில்வரை விற்க முடியாது" என அவர் குறிப்பிட்டுள்ளார்.  

 

Read More