Home> India
Advertisement

மத்திய பிரதேசத்தில் கார் மோதிய விபத்தில் 6 பேர் இறப்பு; 5 பேர் படுகாயம்

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் கார் மோதிய விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மத்திய பிரதேசத்தில் கார் மோதிய விபத்தில் 6 பேர் இறப்பு; 5 பேர் படுகாயம்

புதுடெல்லி: மத்திய பிரதேசத்தின் (Madhya Pradesh) இந்தூரில் உள்ள தேஜாஜி நகர் பகுதியில் இரண்டு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டதில் ஒரு பெண் மற்றும் நான்கு வயது குழந்தை உட்பட 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 5 பேர் பலத்த காயமடைந்தனர் என்று செய்தி நிறுவனம் ஏ.என்.ஐ (ANI) தெரிவித்துள்ளது.

நேற்று (திங்கள்கிழமை) இரவு நடந்த இந்த விபத்தில் ஒரு இராணுவ அதிகாரியும் பலியாகி உள்ளார்.

 

இதற்கிடையில், மத்தியப் பிரதேசத்தின் ஓர்ச்சா நகரில் திங்களன்று மற்றொரு சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. அந்த விபத்தில் ஐந்து பேர் பயணம் செய்த கார் ஆற்றில் விழுந்து. இந்த விபத்துக்கு முக்கிய காரணமாக கூறபடுவதுகூறப்படுவது, காரின் எதிர் பக்கத்திலிருந்து வந்த ஆட்டோரிக்ஷாவுடன் மோதுவதை தவிர்க்க முயன்ற போது, கார் நதியில் வீழ்ந்தது.

இந்த சம்பவத்தை பார்த்த ஆற்றின் கரையோரத்தில் இருந்தவர்கள் மூலம் உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டனர். சிறிய காயங்களுடன் உயிர் பிழைத்த அவர்களை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் ஆட்டோரிக்ஷா டிரைவர் விபத்துக்குப் பிறகு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 

Read More