Home> India
Advertisement

குருகிராமம்மில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 7 பலி, மீட்பு பணி தீவிரம்!

ஹரியானா மாநில குருகிராமம்மில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

குருகிராமம்மில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து: 7 பலி, மீட்பு பணி தீவிரம்!

ஹரியானா மாநில குருகிராமம்மில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

ஹரியானா மாநில குருகிராமம் பகுதியை சேர்ந்த உல்லவாஸ் கிராமத்தில் நான்கு மாடி கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 3 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். மேலும் சிலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என முதல் கட்ட தகவல் வெளியானது. தகவலறிந்து அங்கு சென்ற தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இந்த கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை தற்போது வரை 7 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். மேலும் இந்த விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு தலா 3 லட்சம் நிதி வழங்கப்படும் என முதல் அமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.

Read More