Home> India
Advertisement

தண்டவாளத்தை கடக்க முயற்ச்சி: 5 இளைஞர்கள் பரிதாப பலி!

உத்தரப்பிரதேசத்தில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞர்கள் மீது ரயில் மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

தண்டவாளத்தை கடக்க முயற்ச்சி: 5 இளைஞர்கள் பரிதாப பலி!

உத்தரப்பிரதேச மாநிலம் காஸியாபாத் மாவட்டத்தின் சாதிக்பூர் கிராமத்தைச் சேர்ந்த 14 முதல் 16 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் 7 பேர் ரயில் தண்டவாளத்தை நேற்று இரவு கடக்க முயன்றிருக்கின்றனர். 

அப்போது எதிர்பாரத விதமாக அந்த வழியாக வந்த ரயில் அவர்கள் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 

மேலும், இருவர் மருத்துவமனையில் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இதனால், அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

தகவலறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், உயிரிழந்தவர்கள் விஜய், ஆகாஷ், சமீர், ஆரிஃப், சலீம் என 5 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல் துறையினரின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More