Home> India
Advertisement

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல்; 5 பேர் காயம்

இன்று ஹரி சிங் சாலையில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதில் 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

ஜம்மு-காஷ்மீர்: பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல்; 5 பேர் காயம்

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் (Jammu and Kashmir) ஹரி சிங் சாலையில் இன்று (சனிக்கிழமை) பயங்கரவாதிகள் கையெறி குண்டு மூலம் தாக்குதல் நடத்தி உள்ளனர். பயங்கரவாதிகள் நடத்திய இந்த கையெறி தாக்குதலில் 5 பேர் காயமடைந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களின் நிலை சீராக இருப்பதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த ஐந்து பேரில் ஒரு பெண்ணும், நான்கு ஆண்களும் அடங்குவார்கள்.

பயங்கரவாதிகளின் தாக்குதலை அடுத்து, உடனேயே, போலீஸ் மற்றும் பாதுகாப்புப் படையினர் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்து, பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர். 

 

ஸ்ரீநகரின் ஹரி சிங் தெருவில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தியதாக ஜீ மீடியா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, போலீசார் தேடுதல் பணியை மேற்கொண்டுள்ளனர்.

Read More