Home> India
Advertisement

ராஜஸ்தான் திருமண மண்டப சுவர் இடிந்து 23 பேர் பலி

ராஜஸ்தான் திருமண மண்டப சுவர் இடிந்து 23 பேர் பலி

ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று இரவு திருமண விழா நடைபெற்று கொண்டிருந்தபோது திடீரென சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.

இதனால் திருமண மண்டபத்தில் உள்ள 90 அடி நீளமும், 13 அடி உயரமும் கொண்ட சுவர் இடிந்து விழுந்தது. சுவர் இடிபாடுகளில் சிக்கியும், கூட்ட நெரிசலில் மிதிபட்டும் 4 குழந்தைகள் உள்பட 23 பேர் உடல் நசுங்கி இறந்தனர். 

27 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் சிலர் கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

Read More