Home> India
Advertisement

கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு: 3 பேர் கைது

மேற்கு வங்கத்தில் 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கட்டு கட்டாக 2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டு: 3 பேர் கைது

மேற்கு வாங்களத்தில் அதிக அளவிலான கள்ளநோட்டுக்கள் பழக்கத்தில் இருப்பதாகவும், முர்ஷிதாபாத் நகரில் கள்ளநோட்டுகள் அதிக அளவில் உபயோகிப்பதாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவற்றை கண்டுபிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். 

அப்பகுதியில் சோதனையிட்ட  போலீசார், இரண்டாயிரம் ரூபாய் கள்ளநோட்டு வைத்திருந்த 3 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 5,96,000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர். 

இது போன்று டெல்லியில் நேற்று கள்ளநோட்டுகளை உபயோகித்து வந்த ஒரு நபரை  போலீசார் கைது செய்தனர். அவர் வைத்திருந்த 6,60,000 ரூபாய் கள்ளநோட்டுகளை பறிமுதல் செய்தனர்.

 

;

 

Read More