Home> India
Advertisement

3 வயது பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழித்த 11 வயது சிறுவன்..

டேராடூனில் பக்கத்து வீட்டில் இருந்த மூன்று வயது குழந்தையை கற்பழித்த 11 வயது சிறுவன்!

3 வயது பக்கத்து வீட்டு சிறுமியை கற்பழித்த 11 வயது சிறுவன்..

டேராடூனில் பக்கத்து வீட்டில் இருந்த மூன்று வயது குழந்தையை கற்பழித்த 11 வயது சிறுவன்!

உத்திரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் 3 வயது குழந்தையை கற்பழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தன்று 3 வயது குழந்தையை அவரது பெற்றோர்கள் மற்ற இரண்டு குழந்தைகளுடன் தனியாக வீட்டில் விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். 

அப்பொழுது அவரது வீட்டிற்கு விளையாட வந்த 11 வயது சிறுவன் அந்த 3 வயது குழந்தையை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி அந்த குழந்தையை கற்பழித்துள்ளான். இந்நிலையில் அக்குழந்தை நடந்த சம்பவத்தை வேலை முடிந்து வீடு திரும்பிய தாயிடம் தெரிவித்துள்ளது. 

இதையடுத்து அந்த குழந்தையின் தாய் அந்த சிறுவனை அழைத்து விசாரித்த போது தன் குற்றத்தை ஒப்பு கொண்டுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த தாய் மறுநாள் காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து அந்த சிறுவனை விசாரணைக்காக சிறார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். 3 வயது சிறுமியை 11 வயது சிறுவன் கற்பழித்த சம்பவம் பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

Read More