Home> India
Advertisement

வாராங்கல் வெடிப்பொருள் தொழிற்சாலையில் தீ விபத்து 11 பேர் பலி

தெலங்கானா மாநிலத்தில் உள்ள வாராங்கால் மாவட்டத்தில் அமைந்துள்ள வெடிப்பொருட்கள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்தனர். 

வாராங்கல் வெடிப்பொருள் தொழிற்சாலையில் தீ விபத்து 11 பேர் பலி

வாராங்கால் மாவட்டத்தில் தனியாருக்கு சொந்தமான வெடிப்பொருட்கள் தொழிற்சாலை இயங்கி வருகிறது. தொழிற்சாலையில் வழக்கம் போல ஊழியர்கள் வேலை செய்து வந்தனர். அப்பொழுது திடீரென தீ விபத்து நேரிட்டது. வெடிப்பொருட்கள் தொழிற்சாலை என்பதால் தீ மளமளவென பரவியது. அங்கு வைக்கப்பட்டு இருந்த வெடிப்பொருட்கள் தீ விபத்தில் வெடித்து சிதறியதில், அங்கு வேலை பார்த்திருந்த ஊழியர்கள் 11 பேரின் உடல் சிதறி உயிரிழந்தனர். 5 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள எம்ஜிஎம் மருத்தவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

வெடிப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தால், அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடிபட்டுள்ளனர். மேலும் அவசர உதவிக்காக ஆம்புலன்ஸ் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

தீ விபத்து ஏற்பட்டதற்க்கான காரணம் தெரியவில்லை. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுக்குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read More