Home> Health
Advertisement

இந்தியாவில் ₹250 க்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்குமா.. விரைவில் ஒப்பந்தம்..!

தினமும், கொரோனா தடுப்பூசியின் விலை குறித்து புதிய யூகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. இப்போது புதிய செய்தி என்னவென்றால், சீரம் நிறுவனம் தயாரிக்கும் கொரோனா தடுப்பூசிக்கு இந்தியர்கள் 250 ரூபாய் மட்டுமே விலை கொடுக்க வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது.

இந்தியாவில் ₹250 க்கு கொரோனா தடுப்பு மருந்து கிடைக்குமா.. விரைவில் ஒப்பந்தம்..!

புதுடெல்லி:  தற்போது உலகம் கொரோனா தடுப்பூசிக்காக காத்திருக்கிறது. தடுப்பூசி குறித்து தினமும்  புதிய செய்திகள் வெளிவருகின்றன. 

பிரிட்டனில் தடுப்பூசி கொடுக்கும் பணிகள் தொடங்கி, அங்கு  வரலாற்றின் மிகப் பெரிய தடுப்பு மருந்து திட்டத்தின் முதல் டோஸ் கொடுக்கப்பட்டு விட்டது. 90 வயதான மூதாட்டி, செவ்வாய்க்கிழமை இதைப் பெற்று, இந்த தடுப்பூசியைப் பெற்ற முதல் நபராக சரித்திரத்தில் இடம் பெற்றார். 

இந்தியாவிலும் கொரோனா தடுப்பூசிகளின் (Corona Vaccine) அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதியை பெற நிறுவனங்கள் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இங்கிலாந்தின் ‘பைசர்’ நிறுவனமும், ஜெர்மனியின் ‘பையோ என்டெக்’ நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கொரோனா தடுப்பு மருந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் உருவாக்கி உள்ள கோவிஷீல்டு (COVISHIELD) தடுப்பூசியை இந்தியாவில் அவசரகால பயன்பாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று புனேயின் சீரம் நிறுவனம் நேற்று முன் தினம் விண்ணப்பித்தது.

தடுப்பூசியின் விலையை நிர்ணயிக்க சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII) ) மற்றும் மத்திய அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாக இப்போது தகவல் வெளியாகியுள்ளது

கொரோனா தடுப்பூசியை பெரிய அளவில் சப்ளை செய்வதில் சீரம் நிறுவனம் (SII) முக்கிய பங்கு வகிக்கும் என அரசு நம்புவதாக, பிஸினஸ் ஸ்டாண்டர்ட் செய்தி வெளியிட்டுள்ளது. அரசுக்கும் சீரம் இடையிலான ஒப்பந்தத்தின் கீழ், ஒரு டோஸ் தடுப்பூசிக்கால்ன விலை ரூ .250 என அளவில் நிர்ணயிக்க படலாம் என கூறப்படுகிறது.

ALSO READ | COVID Vaccine-ன் முதல் தடுப்பூசியை போட்டுக்கொண்டார் இங்கிலாந்தின் 90 வயதான Margaret Keenan

 

முன்னதாக, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி (தலைமை நிர்வாக அதிகாரி) ஆதார் பூனவல்லா, இந்த தடுப்பூசிக்கு இந்தியாவின் தனியார் சந்தையில் ஒரு டோஸுக்கு ரூ .1,000  செலவாகும் என்று கூறினார், ஆனால் அதிக அளவில் டோஸ்களை வாங்க அரசு ஒப்பந்தம் செய்யும் போது, அதை குறைந்த விலையில் வாங்கலாம்.

தடுப்பூசி வழங்குவதற்கான சீரம் பட்டியலில் இந்தியா (India) முதலிடத்தில் உள்ளது என்றும் ஆதார் பூனாவாலா கூறியுள்ளார். "சீரம் முதலில் மற்ற நாடுகளில் தடுப்பூசி வழங்குவதை விட இந்தியர்களுக்கு மருந்துகள் வழங்குவதில் அதிக கவனம் செலுத்தும்" என்று அவர் கூறினார். ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா உருவாக்கிய தடுப்பூசியான கோவிஷீல்டிற்கு,  அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாக மூத்த அதிகாரி ஒருவர் திங்களன்று தெரிவித்தார்.

சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா (SII), கோவிஷைல்ட் தடுப்பூசியை பரிசோதிக்க மருந்து நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது. திங்களன்று கோவிஷீல்டிற்காக அவசரகால பயன்பாட்டிற்கான ஒப்புதலுக்காக டி.ஜி.சி.ஐக்கு அனுப்பிய தனது விண்ணப்பத்தில், சீரம், "மருத்துவ பரிசோதனை தொடர்பான நான்கு தரவுகள், கடுமையான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க போதுமான செயல்திறன் கொண்டதாக இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது” என தெரிவித்துள்ளது.

ALSO READ | COVID-19 தடுப்பூசி இயக்கத்தில் மொபைல் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: பிரதமர் மோடி 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More