Home> Health
Advertisement

முதல்முறை உடலுறவு:நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ‘அந்த’ 3 விஷயங்கள்!

முதல் முறையாக உடலுறவு வைத்துக்கொள்வோர் சில விஷயங்களை கண்டிப்பாக நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அவை என்னென்ன விஷயங்கள். 

முதல்முறை உடலுறவு:நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய ‘அந்த’ 3 விஷயங்கள்!

நம்மில் பலருக்கு உடலுறவு குறித்த புரிதல் ஒவ்வொரு மாதிரி இருக்கும். பலருக்கும் அந்த விஷயம் குறித்த எதிர்பார்ப்புகள் வெவ்வேறு மாதிரி இருக்கும். சிலருக்கு உடலுறவு குறித்து ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் யாருடனும் உடலுறவு வைத்து கொண்டிருக்க மாட்டார்கள். இவர்கள் பெரும்பாலும் செவி வழி செய்திகளை கேட்டும் பிறரிடம் அட்வைஸ் பெற்றும்தான் முதன் முறை உடலுறவு கொள்ளும் முன்பு தங்களை தயார் படுத்திக்கொள்வர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான அட்வைஸ் கொடுப்பதால் சிலர் திணருவர். அந்த குழப்பங்களை தவிர்க்கவே இந்த பதிவு. 

முதல் முறை உடலுறவு அல்லது புதிய நபர் ஒருவருடன் உடலுறவு பலருக்கும் நல்ல அனுபவத்தை தருவதில்லை. சில சமயங்களில் இது சிக்கலாகவும் முடிந்து விட வாய்ப்புகள் அதிகம். அதற்கு காரணம், பலருக்கு உடலுறவை எப்படி அணுக வேண்டும் என்று தெரியாமல் இருப்பதுதான். ஒரு சிலருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது கொஞ்சம் மிகையாகவே தெரிந்திருக்கும். இவை இரண்டுமே உடலுறவின் போது பிரச்சனைகளாக பார்க்கப்படுகிறது. இது, உங்களுடன் உடலுறவு கொள்வோரை கொஞ்சம் அதிகமாகவே அசௌகரியப்படுத்த வாய்ப்புகள் அதிகம். எனவே, முதல் முறை உடலுறவு வைத்துக்கொள்ள இருப்போர் என்னென்ன செய்ய வேண்டும் என தெரிந்து கொள்ள வேண்டும். 

மேலும் படிக்க | உடலுறவுக்கு முன் கண்டிப்பாக செய்ய வேண்டிய ‘அந்த’ 7 விஷயங்கள்..!

1.மனம் ஒரு நிலையில் இருக்க வேண்டும்:

பலர், எல்லாம் அறிந்தவராக இருந்தாலும் முதன் முறை புதிதாக எதை செய்தாலும் சற்று தடுமாறத்தான் செய்வர். அதிலும் உடலுறவு விஷயத்தில் கொஞம் அதிகமாகவே பதற்றம் தொற்றிக்கொள்ளும். சிலருக்கு தன்னை பற்றிய பயம் அதிகமாக இருக்கும். “தான் ஒழுங்காக நடந்து கொள்வோமா, தன்னால் சிறப்பாக செயல் பட முடியுமா..,.” போன்ற விஷயங்களை நினைத்து பயப்படுவர். ஒரு சிலர், “நமக்கு எதிரில் இருக்கும் நபர் ஒழுங்காக செயல் படுவாரா? அவருக்கு நம்மால் ஈடு கொடுக்க முடியுமா..?” போன்ற பயம் இருக்கும். ஆனால், முதலில் இப்படி எந்த விஷயங்களையும் உடலுறவின் போது யோசிக்க கூடாது. அதனால், பெட்ரூமிற்கு செல்வதற்கு முன்பே இந்த விஷயங்களை எல்லாம் நன்கு யோசித்து ஆராய்ந்து பின்னர் அந்த அடியை எடுத்து வைக்க வேண்டும். உடலுறவின் போது எதையாவது யோசித்து கொண்டிருந்தால் நம்மால் சிறப்பாக செயல்பட முடியாது. 

2.முன்கூட்டியே ப்ளான் செய்ய வேண்டும்:

பலருக்கு படுக்கையறையில் என்ன செய்ய வேண்டும் என்பதே தெரியாமல் இருக்கும். தன் உடல் பற்றிய புரிதலோ, பார்ட்னரின் உட்ல பற்றிய புரிதலோ இருக்காது. இது சில சமயங்களில் அசௌகரியத்தை ஏற்படுத்தும். ஒருவருக்கு என்ன வேண்டும் என்று தெரிந்து இன்னொருவருக்கு என்ன வேண்டும் என்று தெரியாமல் இருந்து விட்டால் பிரச்சனைதான். இதனால் எந்த நண்மையும் ஏற்படாது. எனவே இருவருக்கும் என்னென்ன தேவை, என்னென்ன தெரியும், எந்த வகையான ஆசைகள் இருக்கிறது என்பதை பேசி முடிவு செய்து கொள்ள வேண்டும். இவற்றையெல்லாம் பேசுவதால் தெளிவாக என்னென்ன வேண்டும் வேண்டாம் என்று புரியுமே அன்றி, வேறு எந்த குறையும் வந்து விடாது. உடலுறவுக்கு முன்பு வெளிப்படையாக பேசுவது, படுக்கையறையில் நன்கு பர்ஃபார்ம் செய்ய உதவும். 

3.பாதுகாப்பு முக்கியம்!

எத்தனை முறை உடலுறவு வைத்துக்கொண்டாலும் அது பாதுகாப்பானதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆணுறை, மருத்துவர்களால் எழுதி தரப்பட்ட மாத்திரைகள் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான முறைகள் என்னென்ன இருக்கிறதாே அவற்றையெல்லாம் பின்பற்ற வேண்டும். ஒருவருக்கொருவர் மரியாதை கொடுக்க வேண்டும். இருவரின் இன்பத்தையும் கருத்தில் கொண்டு அதற்கான வழியை நாேக்கி போக வேண்டும். 

மேலும் படிக்க | 40+ பெண்களுக்கான எச்சரிக்கை... மாரடைப்பின் ‘இந்த’ அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீர்கள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More