Home> Health
Advertisement

இன்சுலினை சுரப்பை அதிகரித்து... எகிறும் சுகர் லெவலை குறைக்கும் நித்திய கல்யாணி..!

Nithyakalyani To Control Blood Sugar Level: நித்திய கல்யாணி, பாரம்பரிய மருத்துவ சிகிச்சையில் நீரிழிவுநோயை கட்டுப்படுத்தும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நித்திய கல்யாணியின் பூக்கள் மட்டுமல்ல இலைகளும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.

இன்சுலினை சுரப்பை அதிகரித்து... எகிறும் சுகர் லெவலை குறைக்கும் நித்திய கல்யாணி..!

Nithyakalyani To Control Blood Sugar Level: இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை உலகம் முழுவதுமே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 10 லட்சம் பேர் நீரிழிவு நோயால் இறக்கின்றனர். குழந்தைகள், முதியவர்கள் என்ற வித்தியாசம் இல்லாத நோய் இது. இன்றைய காலகட்டத்தில் இந்த நோய் சிறு குழந்தைகளை கூட பலியாக்க ஆரம்பித்துள்ளது. சர்க்கரைக்கு பல மருத்துவ சிகிச்சைகள் இருந்தாலும், அதை கட்டுக்குள் வைத்திருக்க பலர் வீட்டு வைத்தியங்களையும் பயன்படுத்துகின்றனர். இவற்றில் ஒன்று நித்திய கல்யாணி. 

நித்திய கல்யாணி, பாரம்பரிய மருத்துவ சிகிச்சையில் நீரிழிவுநோயை கட்டுப்படுத்தும் அருமருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. நித்தியகல்யாணியின் பூக்கள் மட்டுமல்ல இலைகளும் மருத்துவத் தன்மை வாய்ந்தது.

நித்தியகல்யாணி பூ பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. இதன் பூக்கள் மற்றும் இலைகள் இரண்டையுமே சுகர் லெவலை கட்டுப்படுத்த பயன்படுத்தலாம். உண்மையில், நித்திய கலயாணி பூக்களை சாப்பிடுவதன் மூலம், உடலின் கணையத்தில் இருக்கும் பீட்டா செல்கள் செயல்படுகின்றன. இது உடலில் இன்சுலின் ஹார்மோனை தூண்டி சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது. எனவே, நீங்கள் அவற்றை தொடர்ந்து உட்கொண்டால், அவை உங்கள் இரத்த சர்க்கரையை (Diabetes Control Tips) அதிக அளவில் கட்டுக்குள் வைத்திருக்க முடியும். 

சர்க்கரை நோயுடனயுடன், இது பல நோய்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் சரியான முறையைப் பின்பற்றி தினமும் நித்திய கல்யாணி பூக்களை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம், வயிறு தொடர்பான அல்லது சுவாசம் தொடர்பான நோய்கள் போன்ற பல நோய்களிலிருந்து நிவாரணம் பெறலாம்.

நித்திய கல்யாணி பூக்களை மருத்தாக பயன்படுத்தும் முறை

பசுமையான பூக்கள் மூலம் சர்க்கரை நோயை பல வழிகளில் கட்டுப்படுத்தலாம். தினமும் நித்திய கல்யாணி பூக்களை வெறுமனே மென்று சாப்பிடுவதன் மூலம், உடலின் சர்க்கரை அளவு பெரிய அளவில் கட்டுப்படுத்தலாம். இது தவிர, தினமும் காலையில் வெறும் வயிற்றில் நித்திய கல்யாணி பூவின் ஜூஸ் குடிப்பதால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் இருக்கும். இதற்கு தக்காளி, வெள்ளரி, பாகற்காய் போன்ற பல பழங்கள் மற்றும் காய்கறிகளை நித்திய கலயாணி பூக்களுடன் கலந்து அதன் ஜூஸை தயாரிக்கவும். இந்த சாற்றை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். இது சர்க்கரை நோய்க்கு அருமருந்து.

மேலும் படிக்க | இந்த பழத்தின் இலை ஒன்று போதும், சுகர் லெவல் பட்டுன்னு குறையும்

நித்திய கல்யாணி இலைகளை மருத்தாக பயன்படுத்தும் முறை

நித்திய கல்யாணி செடியின் இலைகளை உலர்த்தி பொடி செய்து, அதனை காற்று புகாத கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1 டீஸ்பூன் நித்திய கல்யாணி இலை பொடியை வெதுவெதுபான தண்ணீரில் கலந்து குடிக்க வேனண்டும். இது மிகவும் கசப்பாக இருக்கும் என்றாலும், வெறும் வயிற்றில் காலையில் குடித்து வந்தால் சர்க்கரை வியக்கத்தக்க வகையில் கட்டுப்படும்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வெறும் வயிற்றில் இஞ்சி நீர் ஒன்றே போதும்...!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More