தற்போது தமிழகத்தில் டெங்கு என்னும் கொடிய உயிர்கொல்லி காய்ச்சல் பரவி வருகின்றறது. இதனை எலும்பு முறிவுக் காய்ச்சல் என்றும் அழைப்பார்கள். கொசுக்கள் மூலம் பரவும் இக்காய்ச்சலால் குழந்தைகள், பெரியவர்கள்என்று எராளமனோர் உயிரை விட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலினால் பலர் உயிரை விடுவதற்கு காரணம், அதற்கு எவ்வித தடுப்பு மருந்துகளும் கண்டுபிடிக்கபடாததும் மேலும், பலருக்கு டெங்குவின் அறிகுறிகள் பற்றி சரியாக தெரியாமல் இருப்பதுமாகும்.
தற்போது இந்த டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், நம் சித்த மருத்துவத்தில் இதற்கு ஓர் தீர்வு இருப்பது தெரிய வந்துள்ளது. டெங்குவின் அறிகுறிகளைக் கண்டறிந்து, ஆரம்பத்திலேயே போதிய சிகிச்சை எடுத்து வந்தால், நிச்சயம் டெங்குவின் கொடிய தாக்கத்தில் இருந்து தப்பித்துவிடலாம்.