Home> Health
Advertisement

நீரிழிவு நோய் இருக்கா? முருங்கை என்னும் மந்திரம் கை கொடுக்கும்

Moringa Leaves for Diabetes:  பல உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்தலாம். 

நீரிழிவு நோய் இருக்கா? முருங்கை என்னும் மந்திரம் கை கொடுக்கும்

நீரிழிவு நோய் ஒருவருக்கு வந்துவிட்டால், அதை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மிக முக்கியமாகும். ஆரோக்கியமான உணவு, சிறந்த வாழ்க்கை முறை மற்றும் மருந்துகளை உட்கொள்வதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம். நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், இரத்த சர்க்கரை அளவை தொடர்ந்து பரிசோதிக்கவும். இதனால் நீரிழிவு அபாயத்தைத் தவிர்க்கலாம். பல உணவுகள் மற்றும் பானங்களை உட்கொள்வதால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்தலாம். 

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த பயன்படுத்தப்படும் உணவுகள் மற்றும் பானங்களின் கிளைசெமிக் குறியீடு மிகவும் முக்கியமானது. நீரிழிவு நோயாளிகள் சர்க்கரையை கட்டுப்படுத்த குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவுகளை உட்கொள்ள வேண்டும். முருங்கை மற்றும் அதன் இலைகள் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

முருங்கை பொதுவாக அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. இவை பெரும்பாலும் தென்னிந்திய உணவு வகைகளில் அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. நீரிழிவு நோயாளிகள் முருங்கை மற்றும் அதன் இலைகளை சாப்பிட வேண்டும். அப்படி சாப்பிட்டால் சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் என நிபுணர்கள் கூருகிறார்கள். 

மேலும் படிக்க | உடல் எடையை ஒய்யாரமா குறைக்கணுமா? பூண்டை இப்படி சாப்பிடுங்க போதும் 

இரத்த சர்க்கரை அளவுகளில் முரிங்கையின் விளைவு

மருத்துவ குணங்கள் நிறைந்த முருங்கை பல நூற்றாண்டுகளாக நோய்களுக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. முருங்கையில் ஆன்டிவைரல், ஆண்டிடிரஸன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை சர்க்கரையை கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். இதன் தண்டு, இலைகள், பட்டை, பூக்கள், பழங்கள் மற்றும் தாவரத்தின் பல பாகங்களை வெவ்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். முருங்கைக்காயில் அத்தியாவசிய தாதுக்கள் நிறைந்துள்ளன.

டய்ரி அல்லாத கால்சியமின் மிக நல்ல மூலமாகும் இது. இதில் பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், இரும்பு, தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உணவியல் நிபுணர்களின் கூற்றுப்படி, முருங்கை இலைகளில் குர்செட்டின் உள்ளது. இது ஒரு ஆண்டு ஆக்சிடெண்ட்ட் ஆகும். இது இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. இதில் உள்ள மற்றொரு ஆன்டிஆக்ஸிடன்ட் குளோரோஜெனிக் அமிலம் ஆகும். இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. முருங்கையில் காணப்படும் குளோரோஜெனிக் அமிலம், உடல் சர்க்கரையை சிறப்பாகச் செயலாக்க உதவுகிறது. இதன் தாக்கம் இன்சுலின் அளவுகளிலும் தெரியலாம். 

முருங்கையை உணவில் சேர்ப்பது எப்படி?

நீங்கள் முருங்கை இலைகள் மற்றும் விதைகளை மூன்று வெவ்வேறு வழிகளில் உட்கொள்ளலாம். முருங்கை இலையை பச்சையாகவோ, பொடியாகவோ அல்லது சாறாகவோ உட்கொள்ளலாம். முருங்கை இலைகளை வெந்நீரில் கொதிக்க வைத்து, சுவைக்கு எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து அருந்தலாம். முருங்கை இலை தேநீர் தயாரித்து அதையும் உட்கொள்ளலாம். முருங்கைக்காயை சூப் அல்லது கறிகளில் சேர்த்தும் சாப்பிடலாம்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் இந்த உணவுகளை மறந்தும் சாப்பிடாதீங்க! 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Read More