Home> Health
Advertisement

சுகர் அளவை தட்டு வைக்க இந்த ஒரு இலை மட்டும் சாப்பிட்டால் போதும்

Neem Leaves For Diabetes: நாட்டில் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்த அதிகரித்துக்கொண்டே வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், இந்த நோயாளிகள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

சுகர் அளவை தட்டு வைக்க இந்த ஒரு இலை மட்டும் சாப்பிட்டால் போதும்

Neem Leaves For Diabetes: சர்க்கரை நோய் என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து உள்ளது. இதற்கு முக்கிய காரணம் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஒழுங்கற்ற உணவு பழக்கமே. இந்தியாவில் உள்ள 11 இளைஞரில் ஒருவர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதே நேரத்தில், சுமார் 13.6 கோடி மக்கள் பேர் ப்ரீ டயாபிடிக் நோய்க்கு இரையாகியுள்ளனர். இந்த நோய் ஒருமுறை வரத் தொடங்கிவிட்டால், வாழ்நாள் முழுவதும் இதிலிருந்து மீண்டு வர முடியாது. இருப்பினும் நீரிழிவு நோயை கட்டுக்குள் வைத்திருக்க சில ஆயுர்வேத வைத்தியங்களை முயற்சிக்கலாம். அதன்படி உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதில் வேப்பிலை மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. எனவே சுகர் அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேப்பிலையை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதை தெரிந்துக்கொள்வோம்.

இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வேப்பிலை உட்கொள்ளலாம் | Neem helps to control blood sugar:
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை சாப்பிடுவது நன்மை பயக்கும். ஆயுர்வேதத்தின் படி, வேப்பிலையில் உள்ள சில விஷயங்கள் உடலின் உள்ளே சென்று இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். வேப்பிலையில் பல ஃபிளாவனாய்டுகள் உட்பட பல கூறுகள் நிறைந்துள்ளன, அவை கணையத்தைத் தூண்டுகின்றன. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. ஆனால் இந்த வேப்பிலையை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே பலன் தரும். இதற்கு நீங்கள் வேப்பம்பூ பொடியையும் பயன்படுத்தலாம். இதற்கு, உலர்ந்த வேப்பிலையை மிக்ஸியில் மிருதுவாக அரைக்கவும். அதன் பிறகு இந்த பொடியை ஒரு நாளைக்கு இரண்டு முறை பயன்படுத்தவும்.

மேலும் படிக்க | சுகர் அளவை தட்டி கழிக்க இந்த உலர் பழங்களை கட்டாயம் சாப்பிடுங்கள்

வேப்பிலையை எப்படி சாப்பிடுவது என்று தெரிந்து கொள்ளுங்கள் | How To Consume Neem To Control Diabetes:
அதிகாலையில் வெறும் வயிற்றில் 4 முதல் 5 வேப்பிலையை மென்று சாப்பிடுங்கள். இதன் பிறகு தண்ணீர் குடிக்கவும். இதன் மூலம் வேப்பிலை உடலைச் சென்றடைந்து நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவும். வேப்பிலை சாப்பிட முடியாதவர்கள் வேப்ப எண்ணெய் பயன்படுத்தலாம். வேப்பெண்ணெய் குடிப்பதன் மூலமும் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியும். அதன் பயன்பாடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தும். வேப்பிலையை சாப்பிட கசப்பாக இருக்கலாம், ஆனால் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது.

வேப்பிலை சருமத்திற்கு பொலிவை தரும் | Neem leaves skin glowing:
வேப்பிலையில் உள்ள அனைத்து கூறுகளும் சர்க்கரை நோயுடன் சருமம் தொடர்பான பிரச்சனைகளை நீக்கவும் உதவும். இதன் பயன்பாடு தோல் நோய்களுக்கு நிவாரணம் அளிக்க உதவுகிறது. இருப்பினும் வயதானவர்கள் வேப்பிலைகளை குறைவாக சாப்பிட வேண்டும். மேலும் ஒருமுறை மருத்துவரை அணுகிய பின்னரே இதை உட்கொள்ளவும்.

மேலும் படிக்க | ஹேப்பி ஹார்மோன்களை அதிகரிக்க...காலையில் சாப்பிட வேண்டிய 7 உணவுகள்! 

(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More