Home> Health
Advertisement

எச்சரிக்கை! ‘இவற்றை’ பிரிட்ஜில் வைத்தால் சுவை - சத்து இரண்டும் காலியாகிவிடும்!

பழங்கள், காய்கறிகள், சமைத்த பொருட்கள், வெண்ணெய் பால் என நான் பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கும் பொருட்களின் பட்டியல் மிக நீளம். 

எச்சரிக்கை! ‘இவற்றை’ பிரிட்ஜில் வைத்தால் சுவை - சத்து இரண்டும் காலியாகிவிடும்!

இன்றைய பிள்ஸியான வாழ்க்கையில் பல பொருள்களை நாள்பட உபயோகிக்க என்று ஃபிரிட்ஜில் வைத்துப் பாதுகாக்கிறோம். பழங்கள், காய்கறிகள், சமைத்த பொருட்கள், வெண்ணெய் பால் என நான் பிரிட்ஜில் வைத்து பாதுகாக்கும் பொருட்களின் பட்டியல் மிக நீளம். ஆனால், எந்தப் பொருள்களை வைக்க வேண்டும், எத்தனை நாள்கள் வரை வைத்திருக்கலாம் என்பதை அறியாமல், அந்தப் பொருளையும் கெடுத்து, அதன் மூலம் நம் உடல் நலனையும் கெடுத்துக் கொள்கிறோம். நம் வீட்டு ஃபிரிட்ஜில் வைத்தால், சில பொருட்களின் சுவை, ஊச்சத்து ஆகிய இரண்டும் காலியாகி விடும். வைக்கவே வைக்கக் கூடாத பழங்கள், காய்கறிகள், உணவுகள்  என்ன என்பதை அறிந்து கொள்ளலாம். 

முட்டை: முட்டையை பிரிட்ஜில் வைப்பது முற்றிலும் தவறு. ஏனேன்றால் முட்டையின் மேல் பாக்டேரியாக்கள் இருக்க கூடும். இவற்றை பிரிட்ஜில் வைப்பதன் மூலாம் பாக்டேரியாக்கள் பெருகி, முட்டையினுள் சென்று விடும். அதோடு முட்டை வெளியில் எடுக்கப்பட்ட பின் சீக்கிரம் கெடத் தொடங்கி விடும். அதன் சுவையும் பாதிக்கப்படும். இவை சாப்பொடுவதற்கு ஆரோக்கியமற்றவை 

ப்ரெட்: பிரெட் போன்ற பேக்கரி பொருள்களும் ஃபிரிட்ஜுக்கு வைக்க உகந்தவை அல்ல. சாதாரண தட்பவெப்பத்தில் சுவையும் மிருதுவான தன்மையும் அதிகம் கொண்ட பிரெட், அதிகமான குளிரில் விறைத்துப் போய்விடும். இதனால் சுவையும் கெட்டு, கடினமாகி விடும். 

கத்திரிக்காய்: கத்திரிக்காய் வெப்பநிலை உணர்திறன் கொண்ட காய்கறிகள் ஆகும்.  மேலும் குளிர்சாதன பெட்டியில் நீண்ட காலம் இருந்தால் கெட்டுப் போகும். 10  டிகிரி செண்டிகிரேடுக்கும் குறைவான வெப்பநிலை கத்தரிக்காயின் சத்தினையும், சுவையையும் சேதப்படுத்தும். அவை அறை வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும்.

துளசி: அதேபோல் துளசி , ரோஸ்மெரி அல்லது மற்ற எந்த மூலிகை இலைகளையும் ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. பிரிட்ஜில் வைப்பதால், மருத்துவகுணம் போய் , பயன்படுத்தினாலும், உபயோகம் இல்லாததாக மாறிவிடும். தேவைப்பட்டால் துணியில் சுற்றி ஒரு டப்பாவில் வைக்கலாம்.

தேன்: இயற்கையிலேயே கெட்டுப் போகாத தன்மை கொண்ட தேனும் ஃபிரிட்ஜில் வைக்கக்கூடாத ஒரு பொருள்தான். சாதாரண தட்பவெப்பநிலையில் இறுக மூடி வைத்தாலே தேன் அதன் சத்துக்களை பாதுகாத்து வைத்துக்கொள்ளக் கூடியது. ஆனால், ஃபிரிட்ஜில் குளிர்ந்த சூழலில் வைத்திருக்கும்போது அது தனது நிலையை மாற்றிக்கொண்டு, மணல் போலக் கடினமாகவும், சுவை மாறியும் போய்விடும். ஏறக்குறைய உபயோகிக்க முடியாத அளவுக்கு தேன் மாறிவிடும்.

காபி: காபி தூள் அல்லது காபி கொட்டை இவற்றை ஃபிரிட்ஜில் வைக்க வேண்டியதில்லை. காற்று புகாத பாட்டிலில் வைத்திருந்தாலே போதுமானது. ஃபிரிட்ஜில் இருந்து வெளியாகும் ஈரப்பதம் காபித் தூளை சுவையை கெடுத்து, கெட்டுப்போகச் செய்துவிடும்.

மேலும் படிக்க | ஆர்வ கோளாறுல அதிக விட்டமின் மாத்திரை சாப்பிடாதீங்க.. பேராபத்தை ஏற்படுத்தும்!

பூண்டு: நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் காயக் காயத்தான் பூண்டின் சுவை கூடும் என கூறுவதை கேட்டிருப்போம். அதனால் திறந்தவெளியில் பூண்டை வைத்திருப்பதே நல்லது. ஃபிரிட்ஜில் வைக்கப்பட்டால், பூண்டின் சுவை கெட்டு, அதன் நீண்டகால பலனும் பாதிக்கப்படும்.

பீனட் பட்டர்: பீனட் பட்டர் அறை வெப்பநிலையில் சேமிக்கப்பட வேண்டும். குளிர்சாதன பெட்டியில் சேமித்து வைத்தால் அது உலர்ந்ததாகவும் கடினமாகவும் மாறும். கிரீமி நிலையில், பரவக்கூடிய பீனட் பட்டரை, இருண்ட, உலர்ந்த இடத்தில் சேமித்து வைப்பது நல்லது. 

கெட்ச்சப்: இனிப்பு, புளிப்பு மற்றும் காரச் சுவைகளில் வரும் இந்த வகை கெட்ச்சப்-ஐ ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். ஒரு மாதம் வரை சாதாரணச் சூழலிலேயே கெடாமல் இருக்கக் கூடியது கெட்ச்சப். ஃபிரிட்ஜில் வைத்தால், இறுகிவிடும்.

ஆரஞ்சு: ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற சிட்ரஸ் வகைப் பழங்களும் ஃபிரிட்ஜில் வைக்க கூடாது. அதிகக் குளிரான சூழல், இந்தப் பழங்களின் சிட்ரஸ் அமிலத்தை பாதித்து, சுவையை மாற்றிவிடும். 

அவகேடோ: அவகேடோ பழத்தையும் ஃபிரிட்ஜில் வைக்கவே கூடாது. கடைகளில் வாங்கும்போது பழுக்காத நிலையில் இருக்கும் இந்தப் பழம், ஃபிரிட்ஜில் வைத்தால், பழுக்கவே பழுக்காது. மேலும், அதன் சுவையும் மாறிவிடக்கூடும்.

தக்காளி: அதிகக் குளிர் தக்காளியின் பளபளப்பையும் சுவையும் பாதிக்கக்கூடியது. காற்றுப்புகக்கூடிய சாதாரணச் சூழலிலேயே தக்காளி சில நாள் வரை கெடாமல் இருக்கும். ஃபிரிட்ஜில் வைக்கும் தக்காளி பழுப்பதே இல்லை. எனவே, தக்காளியின் சுவையை அதிகம் பெற ஃபிரிட்ஜில் வைக்க வேண்டாம். 

உருளைக்கிழங்கு: உருளைக்கிழங்கு காய்ந்து இருப்பதே நல்லது. இது, ஈரத்தில் முளைத்துவிடும் தன்மை கொண்டது. சாதாரணச் சூழலில் பேப்பர் பைகளில் சுற்றிவைப்பது சிறந்தது. பிளாஸ்டிக் பைகளில் சுற்றிவைத்தால், உருளைக்கிழங்கின் ஈரப்பதத்தால் சீக்கிரமே கெட்டுவிடும் ஆபத்து உண்டு.

(பொறுப்பு துறப்பு: எங்கள் கட்டுரை தகவலை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும்.)

மேலும் படிக்க | நோய்நொடிகளுக்கு எதிரியாகும் பழங்கள்! புரதச்சத்து உள்ள பழங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More