Home> Health
Advertisement

CANCER: புற்றுநோயின் இந்த அறிகுறிகளை அலட்சியம் செய்ய வேண்டாம்..!!

புற்றுநோய் போன்ற தீவிர நோய் நான்காம் கட்டத்தை அடைந்தால் அதற்கு சிகிச்சையளிப்பது மிகவும் கடினம். அதை முதல் கட்டத்தில் கண்டறிந்தால், அதற்கு எளிதில் சிகிச்சையளிக்க முடியும்.  

CANCER: புற்றுநோயின் இந்த அறிகுறிகளை  அலட்சியம் செய்ய வேண்டாம்..!!

புற்றுநோய் கொடிய நோய் என்றாலும்,  அதனை ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால், குணப்படுத்தலாம். புற்றுநோய் மூன்றாம், நான்காம்  கட்டத்தை அடைந்தால் மக்களைக் காப்பாற்றுவது கடினம். இதைத் தவிர்ப்பதற்கான சிறந்த வழி, எச்சரிக்கையாக இருப்பது. அதனை அறிகுறியின் மூலம்  அடையாளம் காண்பது,  மூன்றாம், நான்காம் கட்டத்திற்கு செல்வதைத் தடுக்கலாம்.

உடலில் புற்றுநோய் அறிகுறிகள் அல்லது எச்சரிக்கை அறிகுறிகள் தென்பட்டால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். அதனால்தான் அந்த அறிகுறிகளைப் பற்றி நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம், அதில் இருந்து நீங்கள் புற்றுநோயின் அறிகுறிகளைப் பற்றி எளிதாகக் கண்டறியலாம்.

மேலும் படிக்க | Cancer: புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!

1. மலத்தில் இரத்தம்

அல்சர், பைல்ஸ், தொற்று இருந்தால் மலத்தில் ரத்தம் வரும் என்றாலும், புற்றுநோய் இருந்தாலும் மலத்தில் இரத்தம் வரும் என்பதால், அது ஒரு பெரிய எச்சரிக்கை அறிகுறியாக கருதப்படுகிறது. இரைப்பைக் குழாயில் ஏதேனும் பிரச்சனையின் காரணமாக மலத்தில் இரத்தம் காணப்படுகிறது. மலம் வழியாக வரும் ரத்தம் அடர் நிறமாக இருந்தால் மலக்குடல் அல்லது குடலில் பிரச்சனை இருக்கலாம். கருமை நிறம் வயிற்றுப் புண் இருப்பதைக் குறிக்கிறது. இருப்பினும், இரண்டு நிகழ்வுகளிலும் அதை உடனே சோதிக்க வேண்டியது அவசியம்.

2. பசியின்மை

புற்றுநோய் உங்கள் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது, இதன் காரணமாக பசி இருப்பதில்லை. வயிறு, கணையம், பெரிய குடல் அல்லது கருப்பை புற்றுநோய் இருந்தால், வயிற்றில் அழுத்தம் இருப்பதை போல் உணரக்கூடும்.  இதன் காரணமாக உங்களுக்கு பசி ஏற்படாது. புற்றுநோயின் இந்த அறிகுறி ஆண்கள் பெண்கள் இரு பாலரிடமும் காணப்படும். மனச்சோர்வு அல்லது காய்ச்சலும் பசியின்மைக்கு காரணமாக இருக்கலாம் என்றாலும், நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி பரிசோதித்து பார்ப்பது நல்லது.

3. சிறுநீரில் இரத்தம்

உங்கள் சிறுநீரில் இரத்தம் இருந்தால், அது புற்றுநோயின் பெரிய அறிகுறியாகக் கருதப்படுகிறது. இது சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீரகக் கல் அல்லது சிறுநீரகக் கோளாறு இருந்தாலும் இப்படி ஒரு பிரச்சனை ஏற்படும் என்றாலும், நீங்கள் ஒரு மருத்துவரை அணுகி சோதித்து பார்ப்பது நல்லது.

மேலும் படிக்க | தினம் ஒரு வெள்ளிரிக்காய் போதும்; புற்று நோயும் அஞ்சி ஓடும்..!!

4. இருமல்

இடைவிடாத இருமல் புற்றுநோயின் எச்சரிக்கை அறிகுறியாகவும் இருக்கலாம். உங்கள் நீண்டகால இருமல் சிகிச்சைக்குப் பிறகும் குணமடையவில்லை. நுரையீரல் புற்றுநோய் பரிசோதனை செய்ய வேண்டும். நுரையீரல் புற்றுநோயில், மார்பு வலி, எடை இழப்பு, கரகரப்பு, சோர்வு மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தும். இத்தகைய அறிகுறிகள் குளிர்-காய்ச்சலிலும் காணப்படுகின்றன என்றலும் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்.

5.  கட்டி

புற்றுநோயின் அறிகுறிகளில் வாய், தொண்டை, கழுத்து போன்ற இடங்களில் காணப்படும் கட்டிகளும் அடங்கும். சாதாரன கட்டி என்றால் வலி இருக்கு, ஆனால், புற்றுநோயின் கட்டியில் வலி இருக்காது. மேலும் கட்டியின் அளவு குறையாமல் படிப்படியாக அதிகரித்துக் கொண்டே இருக்கும். உங்களுக்கு இதுபோன்ற பிரச்சனை இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

மேலும் படிக்க | Omicron: ஒமிக்ரானின் இருந்து உங்களை காக்கும் 'கவச' உணவுகள்...!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Read More