Home> Health
Advertisement

கொலஸ்ட்ரால் இருந்தால் இவ்வளவு ஆபத்தா? ஜாக்கிரதை!

பெரும்பாலும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்பதால் இதனை ஒரு சைலன்ட் கில்லர் என்று அழைக்கலாம்.   

கொலஸ்ட்ரால் இருந்தால் இவ்வளவு ஆபத்தா? ஜாக்கிரதை!

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 18 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இதய நோய்களால் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.  புற்றுநோய், சுவாச நோய் மற்றும் நீரிழிவு நோய்களால் பாதிக்கப்படுவதை காட்டிலும் இதய நோயால் பாதிக்கப்படுபவர்களே அதிகம் என்றும், அதிலும் குறிப்பாக இந்தியாவில் இறப்பு விகிதம் ஐந்தில் ஒரு பங்கு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.  இந்தியாவில் 10 வயது குழந்தைகள் அதிகம் கார்டியோ வாஸ்குலார் நோயால் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. எல்டிஎல் எனப்படும் கொழுப்புப்புரதம் தான் கார்டியோ வாஸ்குலார் நோய்க்கு முக்கியமான ஆபத்து காரணியாக இருக்கிறது, எல்டிஎல் கொலஸ்ட்ராலை நாம் கெட்ட கொலஸ்ட்ரால் என்று அழைக்கிறோம்.  

மேலும் படிக்க | Uric Acid: மஞ்சள் கொண்டு எளிதாய் கட்டுப்படுத்தலாம், வழிமுறை இதோ

பொதுவாக கொலஸ்ட்ரால் என்பது ஒருவிதமான மெழுகு போன்ற தன்மையுடன் இருக்கும்,  இது நமது உடலின் ஆரோக்கியத்திற்கு தேவையான ஒன்றுதான்.  ஆனால் நமது உடலில் கொலஸ்டராலின் அளவு சரியான அளவில் இருக்க வேண்டும், அளவிற்கு மீறினால் இது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். அதிகளவு கொலஸ்ட்ரால் இருப்பது மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு அதிகளவு வாய்ப்புகள் உள்ளது.  எல்லா கொலஸ்ட்ராலும் உடலுக்கு தீங்கை விளைவிக்காது, ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்ட்ரால் உங்கள் உடலுக்கு நன்மையை அளிக்கும்.  உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் வாழ்க்கை முறையை தாண்டி நமது மரபணுக்களை முக்கிய காரணமாக அமைகிறது.  

fallbacks

இதுதவிர புகைபிடித்தல், நீரிழிவு மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகியவையும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பிற்கு காரணமாகும்.  அடிக்கடி நீங்கள் கொலஸ்ட்ரால் அளவை பரிசோதிப்பது, உங்களது மோசமான வாழ்க்கை முறையை ஆரோக்கியமான பாதையில் மாற்றியமைப்பது போன்றவற்றை செய்ய வேண்டும்.  பெரும்பாலும் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது எவ்வித அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது என்பதால் இதனை ஒரு சைலன்ட் கில்லர் என்று அழைக்கலாம். கொலஸ்ட்ரால் ரத்தத்தில் உள்ள மற்ற பொருட்களுடன் இணைந்து, இதயத் தமனிகளின் உட்புறத்தில் 'பிளேக்' எனப்படும் நிலையை உருவாக்குகிறது.  இது இதயத்தின் தசைகளுக்கு தேவையான ஆக்சிஜனை தடுத்து மாரடைப்பை ஏற்படுத்திவிடுகிறது.  மேலும் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தில் இதுபோன்ற பிளேக்குகள் ஏற்படுவது மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை தடுக்கும், இதனால் உடனடியாக பக்கவாதம் ஏற்படும்.

மேலும் படிக்க | நீரிழிவு நோயாளியா நீங்கள்? அப்போ இந்த ரொட்டி மாவு உங்களுக்கு விஷம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More