Home> Health
Advertisement

தீவிரமடையும் கொரோனா... அவசர நிலையை அறிவித்தது ஜப்பான்...

கொரோனா வைரஸ் வழக்குகளில் கூர்மையான அதிகரிப்புக்குப் பின்னர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவசரகால நிலையை அறிவித்துள்ளார்...

தீவிரமடையும் கொரோனா... அவசர நிலையை அறிவித்தது ஜப்பான்...

கொரோனா வைரஸ் வழக்குகளில் கூர்மையான அதிகரிப்புக்குப் பின்னர், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவசரகால நிலையை அறிவித்துள்ளார்...

டோக்கியோ, ஒசாகா உள்ளிட்ட 7 மாகாணங்களில் அவசரகால நிலையை அறிவித்துள்ளார் ஜப்பானின் பிரதமர் ஷின்சோ அபே. நாட்டில் கொரோனா வைரஸ் வழக்குகளின் கூர்மையான அதிகரிப்பை தொடர்ந்து அவர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும், வைரஸ் தாக்கம் மக்களின் வாழ்க்கையையும் பொருளாதாரத்தையும் மோசமாக பாதிக்கின்றன என்று பிரதமர் அபே வருத்தம் தெரிவித்துள்ளார்.
 
இதனுடன், நிர்வாகத்தால் அவசரநிலை விதிக்கப்பட்ட பின்னர் நாட்டில் எதிர்பாராத எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

டோக்கியோ ஒசாகா மற்றும் 5 பிற பகுதிகளில் அவசரநிலை அறிவிக்கப்பட்ட ஒரு அரசாங்க கூட்டத்தை அபே முன்பு அழைத்திருந்தார். ஜப்பானிய பிரதமர் ஒரு நாள் முன்னதாக அவசரகால நிலைக்கான திட்டங்களை அறிவித்தார், குறிப்பாக தொற்றுநோய்களின் புதிய நிகழ்வுகளை மேற்கோளிட்டு, குறிப்பாக டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற நகர்ப்புறங்களில் தனது திட்டங்களை அறிவித்தார்.

இந்த அவசரநிலை செய்வாய் அன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட ஏழு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர அனுமதி இல்லை எனவும், இந்த பகுதிகளில் உள்ள நிறுவனங்களின் அலுவலகங்கள் அடைக்கப்படும் என்றும், இதற்கான மேற்பார்வையினை இப்பகுதியில் ஆளுநர்கள் நிர்வகிப்பர் எனவும் இந்த உத்தரவு குறிப்பிட்டுள்ளது. 

டோக்கியோ, ஒசாக்கவை தவிர சைட்டாமா, கங்வா, சிபா, ஹியோகோ மற்றும் புகுயோகா ஆகிய பகுதிகளில் அவசரகாலச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் பெரிய அளவில் பரவக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, அவசரகால முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி ஜப்பானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3800, மற்றும் கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 80-னை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More