Home> Exclusive
Advertisement

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

டெல்லியின் ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு!

டெல்லி ரோகினியில் மாவட்ட நீதிமன்றம் இயங்கி வருகிறது. இன்று வழக்கம்போல அலுவலக வேலைகள் நடைபெற்றது. அப்பொழுது நீதிமன்ற வளாகத்தில் இரு கேங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலின் போது துப்பாக்கிச் சூடு நடந்ததால், குண்டு பாய்ந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார். காயம் அடைந்தவரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர். 

ரோகினி நீதிமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவத்தால் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

Read More