Home> Education
Advertisement

TET 2022: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை திருத்த அவகாசம் நீட்டிப்பு

TET 2022 edit Application: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய ஆகஸ்ட் இரண்டாம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது

TET 2022: ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பங்களை திருத்த அவகாசம் நீட்டிப்பு

சென்னை: இந்த ஆண்டுக்கான டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28 ஆம் வெளியிட்டது. தேர்வுக்கான விண்ணப்ப நடைமுறை முடிந்த நிலையில், ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய அடுத்த மாதம் (2022, ஆகஸ்ட்) இரண்டாம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை திருத்தம் செய்வது தொடர்பாக விளக்கமாகவும் தெளிவாகவும் தெரிவித்துள்ளது. நடப்பு (2022) ஆண்டுக்கான ஆசிரியர்தகுதித் தேர்வுக்கான முத்ல் தாள் மற்றும் இரண்டாம் தாள் தொடர்பான அறிவிப்பு, ஆசிரியர் தேர்வுவாரிய இணையதளம் வாயிலாக கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியிடப்பட்டது. 

தமிழகத்தில் ‌ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் டெட் (Tamil Nadu Teachers Eligibility Test ) என்ற ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி‌ பெறவேண்டும்.

மேலும் படிக்க | டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் கால அவகாசம் தேவை

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதல் தாளுக்கு 2,30,878 பேர் மற்றும் இரண்டாம் தாளுக்கு 4,01,886 பேர் என 6,32,764 என மொத்தம் பேர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தில் திருத்தம் மேற்கொள்ள பல்வேறு கோரிக்கை மனுக்களை ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு அனுப்பி வருகின்றனர். 

விண்ணப்பத்தாரர்களின் கோரிக்கையை ஏற்று, ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பத்தில் இன்று 24-ந் தேதி முதல் ஆகஸ்ட் 2-ஆம் தேதி வரை திருத்தம் செய்ய அனுமதித்துள்ளது. 

இந்தத் திருத்தங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் செய்யலாம். அதற்கன வசதிகளை ஆசிரியர் தேர்வு வாரியம் செய்துள்ளது. ஒருமுறை மாற்றம் செய்து சமர்பித்த பின், விண்ணப்பத்தில் மீண்டும் மேலும் மாற்றம் செய்யக்கூடாது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தமிழகத்தில் 2012 முதல் 2019 வரை 5 முறை நடத்தப்பட்டிருக்கும் ‘டெட்’ தேர்வுகள் மூலம், 95 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 25 ஆயிரம் பேர் அரசுப் பணியில் சேர்ந்த நிலையில், எஞ்சியவர்கள் அரசுப் பணி வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர்.

கடைசியாக 2019-ம் ஆண்டு நடத்தப்பட்டடெட் தேர்வு, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020, 2021 என கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படவில்லை. தற்போது, பாதிப்பு குறைந்துள்ள நிலையில், கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டதை அடுத்து, 2022-ம் ஆண்டுக்கான ‘டெட்’ தேர்வு இந்த ஆண்டு நடைபெறுகிறது. 

டெட் தேர்வுக்கு விண்ணப்பிக்க வயது வரம்பு கட்டுப்பாடு எதுவும் கிடையாது என்பதால் வழக்கத்தை விட மிக அதிகமான எண்ணிக்கையில் ஆன்லைனில் ஏராளாமானோர் விண்ணப்பித்துள்ளனர், தற்போது, விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | 9,494 காலிப் பணியிடங்கள் - TRB வெளியிட்ட அறிவிப்பு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Read More