Home> Culture
Advertisement

இன்று துவங்கியது காவிரி மகா புஷ்கர விழா!!

இன்று துவங்கியது காவிரி மகா புஷ்கர விழா!!

காவிரி மகா புஷ்கர விழா இன்று மயிலாடுதுறையில் துவங்கியது. இந்த விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

12 ஆண்டுகளுக்கு பின் குரு பகவான் கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளார். அவர், ஓராண்டு காலம், துலாம் ராசியில் சஞ்சரிப்பார். இந்த ஓராண்டில், துலாம் ராசிக்குரிய புண்ணிய நதியான காவிரியில், பிரம்மாவின் கமண்டலத்தில் புஷ்கர தீர்த்தம் காவிரியில் கலந்து, நீராடுபவர்களின் பாவங்களை தீர்க்கும் என்பது ஐதீகம். இதன்படி 144 வருடங்களுக்கு பின் மகா புஷ்கர் விழா இன்று துவங்கியது. 

இந்த விழாவில் ஆயிரகணக்கான பக்தர்கள் மயிலாடுதுறை துலாக்கட்டத்தில் புனிதநீராடினர். வரும் 24 வரை புஷ்கர விழா நடைபெற உள்ளது.

Read More