Home> Business
Advertisement

மத்திய அரசிடம் இருந்து ₹5 கோடி பரிசு பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!

2015 ஆம் ஆண்டின் கறுப்புப் பணச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கொடுப்பவருக்கு கூடுதல் வெகுமதி கிடைக்கும் என்று  2018 ஆம் ஆண்டின் வெகுமதி திட்டம் கூறுகிறது.

மத்திய அரசிடம் இருந்து ₹5 கோடி பரிசு பெற நீங்கள் செய்ய வேண்டியது என்ன..!!!

கறுப்புப் பணம், பினாமி சொத்துக்கள் அல்லது வரி ஏய்ப்பு குறித்து, தகவல் தொழில்நுட்பத் துறையிடம் தகவலளிப்பவர்களை ஊக்குவிக்க வருமான வரித் துறை புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது. கறுப்புப் பணம் குறித்து மத்திய நேரடி வரி வாரியத்திற்கு தகவல் அளிப்பவருக்கு இப்போது ரூ .5 கோடி வரை வெகுமதி கிடைக்கும் என்று தகவல் தொழில்நுட்பத் துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது. ₹5 கோடி வரை வெகுமதி என்பது  2007 வழிகாட்டுதல்களில் மத்திய அரசு வாக்குறுதியளித்த தொகை விட, மிக அதிக அளவாகும் 

2015 ஆம் ஆண்டின் கறுப்புப் பணச் (Black Money) சட்டத்தின் கீழ் தகவல் அளிக்கப்படாத வெளிநாட்டு சொத்துக்கள் பற்றிய தகவல்களை கொடுப்பவருக்கு கூடுதல் வெகுமதி கிடைக்கும் என்று  2018 ஆம் ஆண்டின் வெகுமதி திட்டம் கூறுகிறது.

மேலும் கருப்பு பணம், பினாமி சொத்துக்களை பற்றி தகவல் அளிப்பவர்களை  ஊக்குவிக்கும் நோக்கிலும், அதிக அளவு கறுப்புப் பணம் மற்றும் தகவல் அளிக்கப்படாத சொத்துக்களைக் கைப்பற்றும் நோக்கிலும், மத்திய அரசு வெகுமதியை அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளில் வரி ஏய்ப்பு பற்றிய தகவல்கள் முதல் முறையாக ஒரு தனித்துவமான வகையாகக் கருதப்படும், மேலும் இது மத்திய அரசால் தொடங்கப்பட்ட புதிய திட்டத்தின் கீழ் ₹5 கோடி வரை வெகுமதி அளிக்கப்படும்.

வெளிநாட்டு சொத்துக்கள் குறித்த தகவல் அளித்தால், அந்த சொத்துக்கான வரியில் 3% வகுமதி அளிக்கப்படும். ஆனால் இதற்கான வெகுமதிக்கான உச்ச வரம்பு ₹50 லட்சம் ஆகும்.   

இந்தியாவில் (India) வரி ஏய்ப்பு பற்றிய தகவல் கொடுப்பவருக்கு அதிகபட்சமாக ₹10 லட்சம் இடைக்கால விருது கிடைக்கும். ஆனால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ₹1 கோடிக்கு மேல் இருந்தால், இடைக்கால தொகை ₹15 லட்சம் வரை அதிகரிக்கலாம்.

இறுதியாக கிடைக்கும் வெகுமதியின் அளவு அதற்கான வரியில்  5 சதவீதம் ஆனால், இதற்கான உச்ச வரம்பு ₹50 லட்சம் வரை இருக்கும்.

வரி ஏய்ப்பு குறித்த தகவலில் மூலம் வருமான வரி துறை வரியை வசூலித்து பயன் பெற்றால், தகவல் அளித்தவருக்கும் இடைக்கால வகுமதி, இறுதி வெகுமதி இரண்டும் கிடைக்கும்

ALSO READ | 60 வயதில் கூட Pension திட்டத்தில் சேரலாம். ஒவ்வொரு மாதமும் ரூ. 9000-க்கும் அதிகமான ஓய்வூதியம்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More