Home> Business
Advertisement

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஏன் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது?

Senior Citizens Savings Scheme: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஏன் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் ஓய்வூதியம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தின் வரி சலுகை மற்றும் முதிர்வு விவரங்கள் தெரிந்துக்கொள்ளுவோம்.

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஏன் சிறந்த முதலீட்டுத் திட்டமாக இருக்கிறது?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கு (SCSS): ஓய்வு பெற்ற பிறகு, ஒருவரின் சேமிப்பு என்பது அனைவருக்கும் மிகவும் சிறப்பானதாக இருக்கும். எனவே, ஓய்வு பெற்ற எந்தவொரு நபரும் தனது வாழ்நாள் முழுவதும் உழைத்து சம்பாதித்த பணத்தை அத்தகைய முதலீட்டு விருப்பத்தில் முதலீடு செய்ய விரும்புகிறார், அங்கு 100 சதவீத பாதுகாப்புடன், அவர் சிறந்த வருமானத்தையும் பெறுகிறார். நீங்களும் இதேபோன்ற முதலீட்டைத் தேடுகிறீர்களானால், அஞ்சல் அலுவலகத்தின் சிறு சேமிப்புத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) ஆகியவை சிறந்த தேர்வாக இருக்கும். தபால் அலுவலகத்தின் சிறு சேமிப்பிற்கு அரசாங்கத்தின் உத்தரவாதம் உள்ளது. எனவே பாதுகாப்பு மற்றும் வருமானம் பற்றி கவலை இல்லை. இந்தத் திட்டத்தின் மூலம், உங்கள் பணத்தை முதலீடு செய்து, உங்களுக்கான வருமானத்தை உருவாக்கலாம்.

இந்த மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன?

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) என்பது அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் ஓய்வூதியப் பயன் திட்டமாகும். மூத்த குடிமக்கள் இந்தத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ மொத்தமாக முதலீடு செய்து, வரிச் சலுகைகளுடன் வருமானத்தைப் பெறலாம். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் என்பது தபால் அலுவலகத்தின் அதிக வட்டி கிடைக்கும் சேமிப்புத் திட்டமாகும். மூத்த குடிமக்கள் அருகிலுள்ள தபால் நிலையத்திலோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட வங்கியிலோ சில முக்கிய ஆவணங்களுடன் இதற்கான கணக்கைத் தொடங்கலாம்.

மேலும் படிக்க - நிம்மதியாக ஓய்வூதியம் பெற வேண்டுமா? அப்போ ‘இந்த’ திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்..

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தின் சிறப்பு

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் மொத்த தொகை வைப்புத்தொகையின் அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சமாகும். இது ஏப்ரல் 1, 2023க்கு முன் ரூ.15 லட்சமாக இருந்தது. இத்திட்டத்தில் ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தற்போது, ​​தபால் நிலையத்தின் சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தில் மட்டுமே இவ்வளவு வட்டி கிடைக்கிறது. இதில், வட்டித் தொகை காலாண்டு அடிப்படையில் வழங்கப்படுகிறது.

முதலீட்டு காலம்: 5 ஆண்டுகள்
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2%
குறைந்தபட்ச முதலீடு: ரூ 1000
அதிகபட்ச முதலீடு: ரூ 30,00,000
வரிச் சலுகை: வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் ரூ. 1.5 லட்சம் வரையிலான முதலீட்டுக்கு
முன்கூட்டியே கணக்கை மூடும் வசதி உண்டு
நாமினி வசதி உள்ளது.

எத்தனை மூத்த குடிமக்கள் சேமிப்புத் கணக்குகள் திறக்க முடியும்

மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில், நீங்கள் உங்கள் மனைவியுடன் ஒரு கணக்கு அல்லது கூட்டுக் கணக்கு தொடங்கலாம். இது தவிர, கணவன், மனைவி இருவரும் இதற்குத் தகுதி பெற்றிருந்தால், இரண்டு தனித்தனி கணக்குகளையும் திறக்கலாம். அதிகபட்சம் ரூ.30 லட்சத்தை ஒரு கணக்கிலோ அல்லது மனைவியுடன் கூட்டுக் கணக்கிலோ டெபாசிட் செய்யலாம், அதிகபட்சம் ரூ.60 லட்சத்தை இரண்டு தனித்தனி கணக்குகளில் டெபாசிட் செய்யலாம். 5 ஆண்டுகள் முதிர்ச்சியடைந்த பிறகு இந்தக் கணக்கை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துக் கொள்ளலாம்.

ஒரு மூத்த குடிமக்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு வட்டி கிடைக்கும்

அதிகபட்ச வைப்புத்தொகை: ரூ 30 லட்சம்
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2 சதவீதம்
முதிர்வு காலம்: 5 ஆண்டுகள்
மாத வட்டி: ரூ 20,050
காலாண்டு வட்டி: ரூ.60,150
ஆண்டு வட்டி: ரூ.2,40,600
5 ஆண்டுகளில் மொத்த வட்டி: ரூ 12,03,000
மொத்த வருவாய்: ரூ 42,03,000 லட்சம் (30,00,000 + 12,03,000)

மேலும் படிக்க - ஓய்வுக்குப் பிறகு என்ஜாய்.. ஆடம்பரமாக இருக்கலாம், அளவில்லா வருமானம் கிடைக்கும்

இரண்டு வெவ்வேறு குடிமக்கள் சேமிப்பு கணக்கில் எவ்வளவு வட்டி கிடைக்கும்

அதிகபட்ச வைப்புத்தொகை: ரூ 60 லட்சம்
வட்டி விகிதம்: ஆண்டுக்கு 8.2 சதவீதம்
முதிர்வு காலம்: 5 ஆண்டுகள்
மாத வட்டி: ரூ 40,100
காலாண்டு வட்டி: ரூ 1,20,300
ஆண்டு வட்டி: ரூ.4,81,200
5 ஆண்டுகளில் மொத்த வட்டி: 24,06,000
மொத்த வருவாய்: ரூ 84,06,000 லட்சம் (60,00,000 + 24,06,000)

முதிர்ச்சி காலத்திற்கு முன் திரும்பப் பெறுவதற்கான அபராதம் என்ன?

5 ஆண்டுகள் லாக்-இன் காலத்திற்கு முன்பு குடிமக்கள் சேமிப்பு கணக்கை நிறுத்த வேண்டும் என நீங்கள் நினைத்தால் அதற்கு அபராதம் உண்டு. இந்த அபராதம் நீங்கள் கணக்கைத் தொடங்கியதிலிருந்து எவ்வளவு காலம் கடந்துவிட்டது என்பதைப் பொறுத்தது.

ஒரு வருடத்திற்கு முன் கணக்கு மூட நினைத்தால், டெபாசிட் செய்யப்பட்ட தொகைக்கு வட்டி வழங்கப்படாது. வட்டி செலுத்தப்பட்டிருந்தால், அது அசல் தொகையிலிருந்து கழிக்கப்படும்.

ஒரு வருடத்திற்குப் பிறகு ஆனால் 2 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கு மூட நினைத்தால், கணக்கில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையில் 1.5% பணம் செலுத்தும் நேரத்தில் கழிக்கப்படும்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு, 5 ஆண்டுகளுக்கு முன்பு கணக்கு மூட நினைத்தால், அசல் தொகையில் இருந்து 1 சதவீதம் கழிக்கப்படும்.

மேலும் படிக்க - PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More