Home> Business
Advertisement

SCSS: மூத்த குடிமக்களுக்கான அட்டகாசமான சேமிப்பு திட்டம்... பாதுகாப்பான வருமானம் கேரண்டி

Post Office Senior Citizen Saving Scheme: மூத்த குடிமக்களின் தேவைகளை மனதில் கொண்டு, அரசாங்கம், பிரத்யேகமாக அவர்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை நடத்துகிறது.

SCSS: மூத்த குடிமக்களுக்கான அட்டகாசமான சேமிப்பு திட்டம்... பாதுகாப்பான வருமானம் கேரண்டி

Post Office Senior Citizen Saving Scheme: பணத்திற்கான தேவை அனைவருக்கும் உள்ளது. அதுவும், மூத்த குடிமக்களுக்கு இது சற்று அதிகமாகவே இருக்கும். மூத்த குடிமக்களால் இளைஞர்களை போல பணம் ஈட்ட முடியாது என்பதால், அவர்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்திற்கு தேவையான தொகைக்கான ஏற்பாட்டை செய்ய வேண்டியது மிக அவசியமாகும். பணி ஓய்வை நோக்கி செல்லும் பணியாளர்கள், தங்கள் சேமிப்பை கொண்டு பாதுகாப்பான மற்றும் வசதியான வாழ்க்கையை வாழ ஆசைப்படுகிறார்கள். 

மூத்த குடிமக்களின் இந்தத் தேவைகளை மனதில் கொண்டு, அரசாங்கம், பிரத்யேகமாக அவர்களுக்காக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தை (Senior Citizen Saving Scheme) நடத்துகிறது. இதன் மூலம் மூத்த குடிமக்கள் ஒவ்வொரு மாதமும் பணம் ஈட்ட முடியும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாக ரூ.20,500 வரை பெற முடியும். இந்த திட்டம் ஐந்து ஆண்டுகளுக்கானது. 

SCSS: இதன் குறைந்தபட்ச முதலீடு எவ்வளவு?

தபால் அலுவலக மூத்த குடிமக்கள் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இதில் குறைந்தபட்சம் ரூ.1,000-ல் முதலீடு செய்யலாம். ஓய்வு பெற்ற பிறகு மாதா மாதம் நிலையான ஒரு தொகையை வருமானமாக பெற இந்தத் திட்டம் மூத்த குடிமக்களுக்கு ஏற்றதாக இருக்கும். இதில் முதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும் வட்டி மாதாந்திர செலவினங்களை ஈடுகட்டுவதில் மிகவும் உதவும். 

மேலும் படிக்க | 8வது ஊதியக்குழு... அடிப்படை ஊதியம், ஓய்வூதியத்தில் அதிரடி ஏற்றம்: அரசு ஊழியர்களுக்கு அறிவிப்பு வருமா?

SCSS: இதில் சேர்வதற்கான தகுதி என்ன?

இந்தத் திட்டம் 60 வயதுக்கு மேற்பட்ட குடிமக்களுக்கான திட்டமாகும். 55 முதல் 60 வயதுக்குள் விருப்ப ஓய்வு பெற்றவர்களும் (VRS) இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். இது தவிர பாதுகாப்புப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஊழியர்களும் 50 வயதில் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தை கூட்டுக்கணக்காக வாழ்க்கைத் துணையுடன் சேர்ந்தும் திறக்கலாம். 

SCSS: அஞ்சல் அலுவலகத்தில் இதன் கணக்கை தொடங்கலாம்

- மூத்த குடிமக்கள் (Senior Citizens) தங்கள் SCSS கணக்கை வங்கி அல்லது தபால் அலுவலகம், எங்கு வேண்டுமானாலும் திறக்கலாம். 
- கணக்கு தொடங்க குறைந்தபட்சமாக ரூ.1,000 முதல் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம்.
- இந்த திட்டத்தில் ரூ.1,000 மடங்குகளில் முதலீடு செய்யலாம்.
- இந்த திட்டத்தில் முதலீட்டின் அதிகபட்ச வரம்பு ரூ.30 லட்சமாகும். 

SCSS: இதில் கிடைக்கும் வட்டி எவ்வளவு?

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் 8.2 சதவீத வருடாந்திர வட்டி கிடைக்கிறது. இது பல சேமிப்புத் திட்டங்களை விட அதிகமாகும். இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.30 லட்சத்தை முதலீடு செய்தால், அவருக்கு ஆண்டுக்கு ரூ.2.46 லட்சம், அதாவது மாதா மாதம்  ரூ.20,500 வட்டி கிடைக்கும். இதன் மூலம் பணி ஓய்வு காலத்தில் நல்ல நிதி பாதுகாப்பு கிடைக்கும். 

SCSS: இந்த திட்டத்தின் சிறப்பு நன்மைகள்

- அஞ்சல் அலுவலக மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு பாதுகாப்பான மற்றும் லாபகரமான முதலீட்டுக்கு ஒரு சிறந்த வழியாக பார்க்கப்படுகின்றது.

- இந்தத் திட்டம் முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகிறது.

- இது தவிர, முதலீட்டாளர்களின் பணத்துக்கும் இதில் பாதுகாப்பு கிடைக்கின்றது. 

- பணி ஓய்வுக்குப் பிறகு நிலையான வருமானத்தை பெற நினைப்பவர்கள் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

மேலும் படிக்க | Income Tax Refund கிடைக்க தாமதம் ஆனால், அரசு அதற்கு வட்டி அளிக்கும்: எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More