Home> Business
Advertisement

சென்செக்ஸ் முதல் முறையாக ஒரே நாளில் 2284 புள்ளிகளை பெற்று சாதனை படைத்தது

நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரி குறைத்து மூலம் ஒரே நாளில் அதிக அளவில் பங்குசந்தையின் புள்ளிகள் உயர்ந்து சாதனை படைத்துள்ளது.

சென்செக்ஸ் முதல் முறையாக ஒரே நாளில் 2284 புள்ளிகளை பெற்று சாதனை படைத்தது

புதுடெல்லி: நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கார்ப்பரேட் வரி குறைத்து மூலதன ஆதாயங்களுக்கு கூடுதல் கட்டணம் விதிக்க வேண்டாம் என்று அறிவித்ததன் மூலம், வாரத்தின் கடைசி நாளான இன்று (வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தையில் புள்ளிகள் வேகமாக அதிகரித்தது. இன்று காலை 11 மணிக்கு தொடங்கிய பங்குச் சந்தை  ஆரம்ப முதல் வர்த்தக அமர்வு முடியும் வரை உயர்ந்தே இருந்தது. இதன் மூலம், சென்செக்ஸ் மீண்டும் ஒரு சாதனையில் பெயரை பதிவு செய்தது. பிற்பகல் 2.20 மணியளவில் ​​சென்செக்ஸ் முந்தைய அனைத்து சாதனைகளையும் முறியடித்து ஒரே நாளில் 2284.55 புள்ளிகளைப் பெற்றது. இதுவரை ஒரு நாளில் இவ்வளவு புள்ளிகள் உயர்ந்தது இதற்கு முன்பு நடந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், சிறிது நேரம் கழித்து பங்குச் சந்தை சற்று சரிவைக் கண்டது மற்றும் இன்றைய வர்த்தக முடிவு நாளில் சென்செக்ஸ் 1,921.15 புள்ளிகள் உயர்ந்து 38014.62 மட்டத்தில் முடிந்தது. நிஃப்டியும் சாதனை படைத்து 11274.20 என்ற அளவில் 569.4 புள்ளிகள் உயர்ந்துள்ளது. இது கடந்த 10 ஆண்டுகளில் நிஃப்டியின் ஒரு நாளில் கிடைத்த மிகப்பெரிய லாபமாகும். முழு வர்த்தக நாளில் மொத்தம் 1809 பங்குகள் மூடப்பட்டன, 726 பங்குகள் சரிந்தன, 134 பங்குகள் வர்த்தக அமர்வின் முடிவில் எந்த மாற்றமும் இல்லாமல் பங்குசந்தை நிறைவடைந்தது.

சென்செக்ஸில் இதுவரை ஒரே நாளில் அதிக புள்ளிகள் உயர்ந்த 5 நிகழ்வுகள்:
2019 20 செப்டம்பர் - 2284 புள்ளிகள்
2009 மே 18 -  2110 புள்ளிகள்
2019 மே 20 - 1421 புள்ளிகள்
2008 25 ஜனவரி - 1139 புள்ளிகள்
2008 மார்ச் 25 - 928 புள்ளிகள்

Read More