Home> Business
Advertisement

சேவை கட்டணத்தை 40% உயர்த்திய ரிலையன்ஸ் JIO; டிச.,6 முதல் அமல்!!

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்ட்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 % உயர்த்துவதாக அறிவிப்பு!!

சேவை கட்டணத்தை 40%  உயர்த்திய ரிலையன்ஸ் JIO; டிச.,6 முதல் அமல்!!

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்ட்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 % உயர்த்துவதாக அறிவிப்பு!!

வோடபோன் ஐடியா மற்றும் ஏர்ட்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் ஜியோ தனது வாடிக்கையாளர்களின் கட்டணத்தை 40 % உயர்த்துவதாக அறிவித்துள்ளது. ஆனால் 300 % கூடுதல் தன்மைகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 6 ஆம் தேதி முதல் புதிய பிளான்கள் நடைமுறைக்கு வரவுள்ளது.

ப்ரீபெய்ட் திட்டங்களில் ரிலையன்ஸ் ஜியோவின் கட்டண உயர்வு குறித்து கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம் என்னவென்றால், தொலைத் தொடர்பு ஆபரேட்டர் டிசம்பர் 6 முதல் விலைகளை உயர்த்த உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மற்ற நிறுவனங்கள் டிசம்பர் 3 ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளன.

ரிலையன்ஸ் ஜியோவின் இந்த புதிய ஆல் இன் ஒன் திட்டங்களின் நன்மைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளது. 40 % வரை கட்டணத்தை உயர்த்தினாலும் 300%  அதிகப்படியான நன்மைகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. எனவே, ரிலையன்ஸ் ஜியோ விலையை உயர்த்தினாலும், இது ஆல் இன் ஒன் திட்டங்களின் சில நன்மைகளையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. புதிய பிளான்களின் கட்டண விபரம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகலாம்.

இது குறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ‘AIO திட்டத்தின் கீழ், ஒரு மாதத்துக்கு தினசரி 2 ஜி.பி டேட்டா மற்றும் அன்லிமிடேட் ஜியோ கால்கள், பிற நெட்வொர்க் எண்களுக்கு 1000 நிமிஷங்கள் என கொண்ட பேக்கிற்கான கட்டணமாக 222 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மாதத்துக்கு 111 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மூன்று மாதத்துக்கு மேற்கூறிய திட்டத்துக்கு 444 ரூபாய் ஆகும். 

 

Read More