Home> Business
Advertisement

டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம், ரயில்வே முக்கிய அப்டேட்

Railways Ticket Booking: முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளில் கிடைக்கும் இந்த தள்ளுபடி பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும்.

டிக்கெட் முன்பதிவு முறையில் மாற்றம், ரயில்வே முக்கிய அப்டேட்

நீங்கள் அடிக்கடி ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். அதன்படி, சில நேரங்களில் பயணிகள் நீண்ட வரிசையில் நின்று ரயில் டிக்கெட் எடுக்க வேண்டியுள்ளது. ஆனால் தற்போது இதிலிருந்து விடுபட, டிக்கெட் முன்பதிவு விதிகளை ரயில்வே மாற்றியுள்ளது. இந்த மாற்றத்தின் கீழ், ரயில்வே அமைச்சகம் ஆப்பில் இருந்து முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கான தூரத்தை அதிகரித்துள்ளது.

இனி பயணிகளின் நேரம் மிச்சமாகும்
இந்த மாற்றத்திற்குப் பிறகு, நீங்கள் உங்கள் பயணத்தைத் தொடங்க வேண்டிய நிலையத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தாலும் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளில் கிடைக்கும் இந்த தள்ளுபடி பயணிகளின் நேரத்தை மிச்சப்படுத்தும். பயணச்சீட்டு எடுக்க நீண்ட வரிசையில் நிற்பதால் பயணிகள் அவதிப்படுகின்றனர். உண்மையில், பயணம் தொடங்கும் நிலையத்திலிருந்து 2 கி.மீ தொலைவில் இருந்து இதுவரை நீங்கள் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

மேலும் படிக்க | 10 வருடம் வாடகை வீட்டில் இருந்தால், அந்த வீடு நமக்கு சொந்தமா? உண்மை என்ன?

இந்த மாற்றத்திற்கு இதுவே காரணமாகும்
தற்போது இரண்டு கி.மீ தூரம் 20 கி.மீ ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ., தூரம் இருக்கும் போது, ​​பல நேரங்களில் மொபைல் நெட்வொர்க் காணாமல் போவது ரயில்வே வாரியத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், பயணிகள் விரும்பினாலும் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியவில்லை. இதன் காரணமாக, இந்த தூரம் தற்போது 2 கிலோமீட்டரில் இருந்து 20 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டுள்ளது.

புதிய அமைப்பு என்ன
புதிய முறையின்படி, புறநகர் அல்லாத வகுப்புகளுக்கு, ஐந்து கிலோமீட்டருக்கு பதிலாக, 20 கிலோமீட்டர் தொலைவில் இருந்து முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இது தவிர, புறநகர் பகுதிக்கான டிக்கெட் முன்பதிவுக்கான இந்த தூரம் 2 கி.மீட்டரில் இருந்து 5 கி.மீ ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, ரயில் நிலையத்தை அடைந்ததும், டிக்கெட்டுகளுக்காக நீண்ட வரிசையில் நிற்பதில் இருந்து பயணிகள் விடுபடுவார்கள்.

மேலும் படிக்க | மாதந்தோறும் வருமானத்தை அள்ளித்தரும் அஞ்சல் அலுவலகத்தின் அசத்தலான திட்டம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More