Home> Business
Advertisement

New Pension System: புதிய ஓய்வூதிய திட்டம்! அரசு எடுத்த முக்கிய முடிவு!

New Pension System: மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை(என்பிஎஸ்) செயல்படுத்துவது குறித்து மிகப்பெரிய அறிவிப்பினை அரசு வெளியிட்டுள்ளது.  

New Pension System: புதிய ஓய்வூதிய திட்டம்! அரசு எடுத்த முக்கிய முடிவு!

New Pension System: கடந்த வெள்ளிக்கிழமையன்று அரசு புதிய ஓய்வூதிய முறையை (என்பிஎஸ்) மேம்படுத்துவதற்காக நிதிச் செயலாளரின் கீழ் ஒரு குழு அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளது.  புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான புதிய அணுகுமுறை மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏற்றுக்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.  பல மாநிலங்களும் அகவிலைப்படி இணைக்கப்பட்ட பழைய ஓய்வூதியத் திட்டத்தை (ஓபிஎஸ்) திரும்பப் பெற முடிவு செய்ததன் விளைவாகவே இந்த முடிவை அரசு எடுத்துள்ளது.  பழைய ஓய்வூதிய திட்டத்தை திரும்ப பெற பல மாநிலங்களில் உள்ள ஊழியர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | Old Pension Scheme: சுமுகமான முறையை ஆராயும் அரசு, உத்தரவாதமான வருமானம் கிடைக்குமா?

ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பஞ்சாப் மற்றும் இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநில அரசுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தையே செயல்படுத்துவதற்கான முடிவைப் பற்றி தெரிவித்துள்ளதோடு புதிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் திரட்டப்பட்ட கார்பஸைத் திரும்பப் பெறுமாறும் கோரிக்கை வைத்துள்ளது.  ஜனவரி 1, 2004க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட மத்திய அரசு ஊழியர்கள் எவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீட்டெடுக்கும் எந்தவொரு திட்டத்தையும் பரிசீலிக்கவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது.  பழைய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் இறுதியாக பெற்ற சம்பளத்தில் 50 சதவீதத்தை மாதாந்திர ஓய்வூதியமாகப் பெற்றனர், இந்த தொகை அகவிலைப்படி விகிதங்களின் அதிகரிப்புடன் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.  மார்ச் 4, 2023 நிலவரப்படி, தேசிய ஓய்வூதிய அமைப்பு மற்றும் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் நிர்வாகத்தின் கீழ் உள்ள மொத்த சொத்துக்கள் ரூ.8.81 லட்சம் கோடியாக உள்ளது.

2004-ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி அல்லது அதற்குப் பிறகு மத்திய அரசில் சேரும் ஆயுதப்படை அதிகாரிகளை தவிர அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.  மேலும் சில மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசாங்கங்களும் அவர்களது புதிய ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது.  ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (பிஎஃப்ஆர்டிஏ) தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கம் தவிர, 26 மாநில அரசுகள் தங்கள் ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது.  மே 1, 2009 முதல் தன்னார்வ அடிப்படையில் ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் புதிய ஓய்வூதிய திட்டமே செயல்படுத்தப்படுகிறது.  ஓய்வூதிய சந்தையை ஒழுங்குபடுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும், அரசாங்கம் 2003 இல் பிஎஃப்ஆர்டிஏ-வை உருவாக்கியது.

மேலும் படிக்க | 7th Pay Commission ஜாக்பாட்: அகவிலைப்படி அதிகரிப்பால் உயரும் ஊதியம், முழு கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Read More