Home> Business
Advertisement

பரஸ்பர நிதியம்.... 5000 ரூபாயை 1 கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!

துரித கதியிலான வாழ்க்கையில், எல்லோரும் பணக்காரர்களாக மாற விரும்புகிறார்கள். ஒவ்வொருவரின் குறிக்கோளும் கோடீஸ்வரர் ஆக வேண்டும். ஆனால் இதற்கு முதலீடு குறித்து விழிப்புணர்வு தேவை. 

பரஸ்பர நிதியம்.... 5000 ரூபாயை 1 கோடியாக மாற்றும் மேஜிக் பார்முலா..!!

புத்தாண்டு பிறக்க இன்னும் சில மணி நேரங்களே உள்ளன. புத்தாண்டில், பலர் தங்கள் வாழ்வில் மாற்றத்தைக் கொண்டுவர புதிய ஆண்டில் புதிதாக ஏதாவது செய்யப் போகிறோம் என்று அடிக்கடி சபதம் எடுப்பார்கள். ஆனால் புத்தாண்டு வந்து செல்லும், ஆனால், பலர் அதனை நிறைவேற்ற ஆர்வம் இல்லமால் நாட்களை வீணடித்து விடுவார்கள். காலம் யாருக்காகவும் காத்திருப்பதில்லை, எனவே எதிர்காலத்தைப் பற்றி நீங்கள் விழிப்புடன் இருந்தால், நிகழ்காலத்தில் திட்டமிட்டு முன்னேற வேண்டும். குறிப்பாக நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்தால், நீங்கள், வருங்காலத்தை பற்றி தீவிரமாக சிந்திக்க வேண்டும். ஏனெனில் முதுமை என்பது நிச்சயம், ஆனால் முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளை, குறிப்பாக நிதி ரீதியாக, பிரச்சனைகளை தவிர்க்க அனைவரும் சரியான நேரத்தில் திட்டமிட வேண்டும். அத்தகைய சூழ்நிலையில், 2024 ஆம் ஆண்டு அதாவது, புதிய ஆண்டிலிருந்து நீங்கள் புதிதாகத் தொடங்கலாம். இதற்கு வலுவான மன உறுதி தேவைப்படும், முதலீட்டின் முதல் படியை நீங்கள் எடுத்தவுடன் இலக்குகள் தானாகவே எளிதாகிவிடும்.

பணக்காரனாவது எளிது!

உண்மையில், இந்த துரித கதியிலான வாழ்க்கையில், எல்லோரும் பணக்காரர்களாக மாற விரும்புகிறார்கள். ஒவ்வொருவரின் குறிக்கோளும் கோடீஸ்வரர் ஆக வேண்டும். ஆனால் இதற்கு முதலீடு குறித்து விழிப்புணர்வு (Investment Tips) தேவை. இன்றைய காலகட்டத்தில் கோடீஸ்வரர் ஆவது கடினமான காரியம் இல்லை என்பதும் ஓரளவுக்கு உண்மைதான். சிறிய தொகையைச் சேர்ப்பதன் மூலம் இலக்கை அடையலாம். புத்தாண்டு அதாவது 2024 முதல் ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் சேமித்தால், எத்தனை நாட்களில் நீங்கள் கோடீஸ்வரர் ஆவீர்கள் என்பதை இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். ஒவ்வொரு மாதமும் 5000 ரூபாய் சேமிப்பது நடுத்தர வருமானம் உடையவர்களுக்கு கடினமான காரியம் அல்ல. புத்தாண்டிலிருந்து இந்தப் பணியில் ஈடுபடுங்கள். இன்னும் சில வருடங்களில் நிறைய பணத்தை சேமித்து பணக்காரர் ஆகிவிடலாம்.

5000 ரூபாயில் முதலீடு செய்யத் தொடங்குங்கள்

எனவே, புத்தாண்டு முதல் ஒவ்வொரு மாதமும் ரூ. 5000 டெபாசிட் செய்வதன் மூலம் நீங்கள் கோடீஸ்வரராகலாம், இலக்கை எவ்வாறு அடையலாம். இதற்கான பணத்தை எங்கே முதலீடு செய்வது? இன்று அனைவருக்கும் பரஸ்பர நிதியம் என்னும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரியும். மாதத்திற்கு வெறும் 500 ரூபாயில் நீங்கள் பரஸ்பர நிதிகளில் SIP செய்யலாம், SIP என்பது மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கான ஒரு வழியாகும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் ஒவ்வொரு மாதமும் மியூச்சுவல் ஃபண்டில் ரூ. 5000 எஸ்ஐபி திட்டத்தில் முதலீடு செய்து, அதில் 15% வருடாந்திர வருமானத்தைப் பெற்றால், 22 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடுவீர்கள். உங்களிடம் மொத்தம் ரூ.1.03 கோடி இருக்கும். அதே சமயம் இந்த 22 ஆண்டுகளில் நீங்கள் மொத்தம் ரூ.13.20 லட்சம்  மட்டுமே டெபாசிட் செய்திருப்பீர்கள்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யுங்கள்

மறுபுறம், ஆண்டு வருமானம் 17 சதவீதம் என்றால், மாதந்தோறும் ரூ. 5000 முதலீடு செய்வதன் மூலம், 20 ஆண்டுகளிலேயே மியூச்சுவல் ஃபண்டுகளில் இருந்து ரூ.1.01 கோடி வருமானம் பெறலாம். இது மட்டுமின்றி, மாதம் 5000 ரூபாயில் முதலீடு செய்ய ஆரம்பித்து,  உங்கள் வருமானம் கூட கூட, ஆண்டுக்கு 10 சதவீதம் என்ற அளவில் முதலீட்டை அதிகப்படுத்தினால், 12 சதவீதம் ஆண்டு வருமானம் இருந்தால் கூட, 20 ஆண்டுகளுக்குப் பிறகு, உங்காளிடம் 1 கோடி ரூபாய் கிடைக்கும். அதாவது, 2024-ம் ஆண்டு முதல் மாதம் ரூ.5000 எஸ்ஐபி செய்தால், 2044-ம் ஆண்டில் ரூ.1 கோடிக்கு நீங்கள் சொந்தக்காரர் ஆவீர்கள்.

மேலும் படிக்க | பங்குச்சந்தை முதலீடு மூலம் கோடீஸ்வரனாக... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!

முதலீட்டு அளவை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரிக்க வருமானம் பெருகும்

மாதாந்திர எஸ்ஐபி ரூ 5000 என்ற அளவில் முதலீடு செய்து வரும் நிலையில், முதலீட்டு அளவை ஆண்டுதோறும் 10 சதவீதம் அதிகரித்தால் வருமானமும் கூடிக் கொண்டே போகும். அதன் ஆண்டு வருமானம் 15 சதவிகிதம் என்றால், நீங்கள் மொத்தம் 1,39 ,18,156 ரூபாயைப் பெறுவீர்கள், அதேசமயம் இந்த காலகட்டத்தில் நீங்கள் மொத்தம் 34,36,500 ரூபாய் முதலீடு செய்வீர்கள். ஆனால், இது மாதத்திற்கு ரூ.5000 என மட்டுமே கணக்கிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் குறைந்தபட்சம் ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை சம்பளம் வாங்குபவர்களால் இதைச் செய்ய முடியும். முதலீட்டுத் தொகை இருமடங்காக இருந்தால் இயற்கையாகவே வருமானமும் இரட்டிப்பாகும். எனவே, 2024 ஆம் ஆண்டில் முதலீட்டின் முதல் படியை எடுத்து உங்கள் எதிர்காலத்தை மறக்க முடியாததாக ஆக்குங்கள்.

(குறிப்பு: இந்த கட்டுரை தரவு அடிப்படையிலானது. மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், நிதி ஆலோசகரின் உதவியைப் பெறவும்.)

மேலும் படிக்க | மூத்த குடிமக்களே... இன்னும் 7 நாள் தான் இருக்கு... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More