Home> Business
Advertisement

SIP Calculator: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... 60வது வயதில் ரூ.10 கோடி கையில் இருக்கும்!

SIP Investment Tips: நீங்கள் தினமும் டீக்காக செலவழிக்கும் பணத்தை மிச்சம் செய்து, திறமையாக முதலீடு செய்தாலே போதும். நீங்கள் கோடிஸ்வரர் ஆகும் கனவு நிறைவேறி விடும். அதற்கான சூத்திரம் என்ன என்பதை அறிந்து கொள்ளலாம்.  

SIP Calculator: டீ காசை மிச்சம் பிடித்தாலே போதும்... 60வது வயதில் ரூ.10 கோடி கையில் இருக்கும்!

தேநீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என சுகாதார வல்லுநர்கள் பலர் கூறுகின்றனர். டீ குடிப்பது காலை தொடங்கி மாலை வரை தொடர்கிறது. ஒன்றும் இல்லை என்றால் டீ சாப்பிடலாம் என தோன்றுவது இயற்கை. குறிப்பாக அலுவலகங்களில் பணிபுரியும் நபர்களிடம் இந்த பழக்கத்தை பார்க்கலாம். நம் உடல் ஆரோக்கியத்தையும் பொருளாதார ஆரோக்கியத்தையும் கெடுக்கும் இத்தகைய பழக்கத்தை விட்டாலே போதும். நீங்கள் கோடீஸ்வரர் ஆகலாம். தற்போது நாட்டில் ஒரு கோப்பை தேநீர் குறைந்தபட்சம் ரூ.10க்கு கிடைக்கிறது. ஒரு சாதாரண மனிதன் கண்டிப்பாக ஒரு நாளைக்கு இரண்டு முறை தேநீர் குடிப்பார். அதாவது தினமும் குறைந்தது ரூ.20 டீக்கு செலவிடுகிறார். சிலர் ஒரு நாளைக்கு பல முறை தேநீர் அருந்துவார்கள். வீட்டில் டீ தயாரித்து குடித்தால் கூட சர்க்கரை, டீத்தூள், பால் என நிறைய பணம் செலவாகிறது.

புத்தாண்டு முதல் தேநீர் குடிப்பதை நிறுத்த உறுதிமொழி எடுக்க உங்களால் முடியுமா.... அதில் பல நன்மைகள் உள்ளன. ஆரோக்கியத்துடன், பொருளாதாரத்திலும் நிலைமை மேம்படும். டீயை விட்டாலே கோடீஸ்வரன் ஆகலாம். சிறு துளி பெரு வெள்ளம் என்று ஒரு பழமொழி உண்டு. தேநீருக்குச் செலவழிக்கும் தொகையைச் சேமித்தால், நீங்கள் கோடீஸ்வரன் ஆகலாம். முழுமையான சூத்திரத்தை விளக்குவோம், இது எப்படி சாத்தியம் என வியப்பாக இருக்கிறதா...

கோடீஸ்வரர் ஆவதற்கான ஃபார்முலா!

தினமும் வெளியில் இரண்டு டீ குடித்தால், குறைந்தபட்சம் 20 ரூபாய் செலவாகும். அதாவது மாதம் 600 ரூபாய் செலவிடுகிறோம். இந்த பணத்தை தினமும் சேமிப்பதன் மூலம், 10 கோடி ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம். இன்று அனைவருக்கும் மியூச்சுவல் ஃபண்ட் பற்றி தெரியும். இதில், ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யலாம். தேநீர் அருந்துவதை நிறுத்திவிட்டு, மீதமுள்ள பணத்தை முறையான முதலீட்டுத் திட்டத்தில் (SIP) முதலீடு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்டுகள் நீண்ட காலத்திற்கு வலுவான வருமானத்தை அளித்து, சாமானியனை கோடீஸ்வரனாக்கியுள்ளன. சில ஃபண்டுகள் 20 சதவீதம் வரை வருமானம் (Investment Tips) கொடுத்துள்ளன.

பரஸ்பர நிதிகளில் முதலீடு செய்வதன் மூலம் சாத்தியமான இலக்குகள்

20 வயதில் ஒரு இளைஞன் தேநீர் பழக்கத்தை கைவிட்டு, ஒரு நாளைக்கு 20 ரூபாயைச் சேமித்தால், இந்தத் தொகை ஒரு மாதத்தில் 600 ரூபாயாகிறது. மியூச்சுவல் ஃபண்டுகளில் இந்தத் தொகை ஒவ்வொரு மாதமும் SIP ஆக இருக்க வேண்டும். 40 ஆண்டுகளுக்கு (480 மாதங்கள்) தொடர்ந்து ரூ.20 டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலிக்க முடியும். இந்த முதலீட்டில் சராசரி ஆண்டு வருமானம் 15% என்றால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்த நிதி ரூ.1.88 கோடியாகிறது என்பது கணக்கீடு. இந்த 40 ஆண்டுகளில் முதலீட்டாளர் ரூ.2,88,00 மட்டுமே டெபாசிட் செய்வார். அதேசமயம் எஸ்ஐபியில் மாதம் ரூ.600க்கு 20 சதவீதம் வருமானம் கிடைத்தால், 40 ஆண்டுகளுக்குப் பிறகு மொத்தம் ரூ.10.21 கோடி சேர்ந்து விடும்.

மேலும் படிக்க | பங்குச்சந்தை முதலீடு மூலம் கோடீஸ்வரனாக... நீங்கள் கடைபிடிக்க வேண்டியவை!

SIP மூலம் 30 ஆண்டுகளுக்கு முதலீடு

இது தவிர, 30 வயது இளைஞன் தினமும் 30 ரூபாய் சேமித்தால், அது மாதம் 900 ரூபாயாகிறது. இந்தத் தொகையை SIP மூலம் 30 ஆண்டுகளுக்கு மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்து, ஆண்டுக்கு 10 சதவீதம் முதலீட்டை அதிகரித்தால், அவருக்கு மொத்தம் ரூ.1.35 கோடி கிடைக்கும். 15 சதவீத வருடாந்திர வருமானத்தின் அடிப்படையில் இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது 30 வயதில் இருந்து மாதம் 900 ரூபாய் முதலீடு செய்தால் 60 வயதில் கோடீஸ்வரராகலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், தேநீர் பழக்கத்தை கைவிட்டு, கோடீஸ்வரராகும் பாதையை நீங்களும் தேர்வு செய்யலாம்.

மியூச்சுவல் ஃபண்டுகளில் கூட்டு வட்டியைப் பெறுவதன் மூலம், ஒரு சிறிய முதலீடு கூட நீண்ட காலத்திற்கு பெரிய நிதியாக மாறும் என்பது கவனிக்கத்தக்கது. இருப்பினும், மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதில் ஆபத்தும் உள்ளது. எனவே, எங்கும் முதலீடு செய்வதற்கு முன், கண்டிப்பாக நிதி ஆலோசகரின் உதவியைப் பெறுங்கள்.

மேலும் படிக்க | மூத்த குடிமக்களே... இன்னும் 7 நாள் தான் இருக்கு... சான்ஸை மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More