Home> Business
Advertisement

PPF: தினம் ரூ.416 சேமித்தால் போதும்... முதிர்வின்போது கையில் ரூ.1.03 கோடி இருக்கும்!

PPF Investment Tips: இளம் வயதில் முதலீட்டை தொடங்குவது, உங்களை எளிதில் பணக்காரராக்கும். கல்வியை முடித்து வேலையில் சேர்ந்த உடனேயே, வாங்கும் சம்பளத்தில் ஒரு 10% ஆவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எளிதில் பணக்காரர் ஆகலாம். 

PPF: தினம் ரூ.416 சேமித்தால் போதும்... முதிர்வின்போது கையில் ரூ.1.03 கோடி இருக்கும்!

Public Provident Fund Investment Tips: நம்மில் அனைவருக்குமே கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும். கோடீஸ்வரர் இல்லை என்றால் ஒரு லட்ச அதிபதியாக இருக்க வேண்டும் என்றாவது நாம் நினைப்போம். இன்றைய காலகட்டத்தில், குழந்தைகளுக்கு நல்ல கல்வி அளிக்க வேண்டும், அவர்களது வாழ்வை வளமாக ஆக்க வேண்டும், ஓய்வு காலத்தில் யாரையும் சாராமல் நாம் கௌரவமாக வாழ வேண்டும் என்று நினைக்காதவர் யாரும் இருக்க முடியாது. இவை எல்லாவற்றிற்குமே பணம் தேவை.

இளம் வயதில் தொடங்கும் முதலீடு

இளம் வயதில் முதலீட்டை தொடங்குவது, உங்களை எளிதில் பணக்காரராக்கும். கல்வியை முடித்து வேலையில் சேர்ந்த உடனேயே, வாங்கும் சம்பளத்தில் ஒரு 10% ஆவது சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் எளிதில் பணக்காரர் ஆகலாம். நீண்ட கால முதலீட்டை (Investment Tips), புத்திசாலித்தனமாக திட்டமிட்டு செய்தால் கோடீஸ்வரர் ஆவது எளிது. தினமும் 416 ரூபாய் சேர்ப்பதன் மூலம் நீங்கள் எப்படி கோடீஸ்வரர் ஆகலாம் என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

பி பி எஃப் என்னும் பொது வருங்கால வைப்பு நிதி public provident fund PPF

பணத்தை பன்மடங்காக்கு உதவும் சேமிப்பு திட்டங்களில் ஒன்று பொது வருங்கால வைப்பு நிதி PPF. இந்த முதலீட்டு திட்டத்தில், தினம் 416 ரூபாய் என்ற அளவில், மாதம் ரூபாய் 12,500 சேமித்தால் போதும் நீங்கள் எளிதில் கோடீஸ்வரர் ஆகலாம். 15 வருடங்களுக்கு தொடர்ந்து, தினம் ரூபாய் 416 என்ற அளவில் நீங்கள் முதலீடு செய்த வந்த செய்து வந்தால், முதிர்ச்சியின் போது உங்களுக்கு ரூபாய் 40.68 கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்த முதலீடு ரூபாய் இரண்டு 22. 50 லட்சமாக இருக்கும். அதே சமயத்தில் வட்டி வருமானம் ரூபாய் 18.18 லட்சம் என்ற அளவில் இருக்கும். சுமார் 7.1% வருடாந்திர வட்டி interest on PPF என்ற கணக்கில் இந்த வருமானம் கணக்கிடப்பட்டுள்ளது. கூட்டு வட்டியின் பயனால், வட்டி வருமானம் அதிகமாக இருக்கும்.

கோடீஸ்வரர் ஆக நீங்கள் செய்ய வேண்டியது (How to Become Rich)

பொது வருங்கால வைப்பு நிதியின் மூலம் நீங்கள் கோடீஸ்வரர் ஆக விரும்பினால், 15 ஆண்டு கால முதலீட்டுக்கு பிறகு, ஐந்து ஆண்டுகளுக்கு இரண்டு முறை இந்த திட்டத்தை நீட்டிக்க வேண்டும். இதன் மூலம் உங்கள் முதலீட்டு காலம் 25 ஆண்டுகளாக இருக்கும். 25 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு முதிர்வு தொகையாக ₹ 1.03 கோடி கிடைக்கும். இந்த காலகட்டத்தில் நீங்கள் செய்த மொத்த முதலீட்டு தொகை ரூபாய் 37.50 அளவில் இருக்கும். வட்டி வருமானமாக உங்களுக்கு கிடைக்கும் தொகை, ரூபாய் 65.58 லட்சம். கூட்டு வட்டியினால், வட்டி தொகை முதலீட்டை விட அதிகமாக உள்ளது.

மேலும் படிக்க | EPF Claim மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்படுகிறதா? கவலை வேண்டாம், புதிய வழிகாட்டுதல்கள் இதோ

வரிவிலக்கு பலன்கள்

பிபிஎஃப் திட்டத்தின் கீழ், பணத்தை பன்மடங்காக ஆக்குவதோடு மட்டுமல்லாமல், வருமான வரி விலக்கின் income tax benefits பலனையும் பெறலாம். வருமான வரி சட்டத்தின் 80 சி பிரிவின் கீழ், வருமான வரி விலக்கு கிடைக்கும். இந்தத் திட்டத்தில் ரூபாய் 1.5 லட்சம் வரையிலான முதலீட்டிற்கு வரி விலக்கு பெறலாம். மேலும் பி பி எப் கணக்கின் மீது கிடைக்கும் வட்டிக்கும் வரி விதிக்கப்படுவதில்லை. சிறு சேமிப்பு திட்டங்களை அரசாங்கம் தொடர்ந்து ஊக்குவிக்கும் நிலையில், பணத்தை முதலீடு செய்வது முற்றிலும் பாதுகாப்பானது.

மேலும் படிக்க | FASTag KYC அப்டேட் செய்யும் எளிய வழிமுறை... முழு விபரம் இதோ..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More