Home> Business
Advertisement

மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

7th Pay Commission DA Hike Latest News: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு மற்றும் அகவிலை நிவாரணம்  விரைவில் வழங்கப்பட உள்ளது.

மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நற்செய்தி! உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

7வது ஊதியக் குழுவின் அகவிலைப்படி உயர்வின் சமீபத்திய செய்தி: மத்திய அரசின் ஒரு கோடிக்கும் அதிகமான மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கப் போகிறது. அதன்படி தற்போது, மத்திய அரசு தனது மத்திய ஊழியர்களுக்கும் ஓய்வூதியதாரர்களுக்கும் அடுத்த மாதம் அகவிலைப்படி உயர்வு (டிஏ உயர்வு) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர் உயர்வு) பரிசாக வழங்கலாம்.

இந்த உயர்வு ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வந்ததாக கருதப்படும். ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, மத்திய அரசு தரப்பிடமிருந்து அகவிலைப்படி உயர்வு (டிஏ உயர்வு) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) செப்டம்பர் மாதம் உயர்த்தி மத்திய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission: ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட், ஊதியத்தில் சூப்பர் ஏற்றம்..விரைவில் அறிவிப்பு

இதனிடையே வெளியான செய்திகளின் படி இம்முறை மத்திய அரசு அகவிலைப்படியை (Dearness Allowances) நான்கு அல்லது மூன்று சதவீதம் உயர்த்தப்படலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. உண்மையில், தொழிலாளர் அமைச்சகம் வெளியிட்ட AICPI (All India Consumer Price Index ) புள்ளிவிவரங்களின் அடிப்படையில், அகவிலை நிவாரணத்தை மத்திய அரசு உயர்த்தி அறிவிக்கிறது. ஜனவரி முதல் ஜூன் வரை வெளியிடப்பட்ட AICPI (All India Consumer Price Index ) தரவுகளின்படி, இந்த முறை அகவிலைப்படி (டிஏ உயர்வு) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர் உயர்வு)  4 சதவீதம் அதிகரிக்கப்படலாம் என்று யூகிக்கப்படுகிறது. அகவிலைப்படி அதிகரிப்பு ஆறு மாத பணவீக்க தரவுகளின் அடிப்படையில் அரசாங்கத்தால் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இருப்பினும், இந்த முறை அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) 4 சதவீதமுக்கு பதிலாக 3 சதவீதம் மட்டுமே உயர்த்தப்படும் என்றும் ஊடகங்களில் ஊகங்கள் வெளியிடப்படுகின்றன. எனினும், இறுதி முடிவு அரசாங்கத்திடம் இருக்கும், இதனால் அரசு தனக்கேற்ப அதிகரிப்பை அறிவிக்கும். மேலும் 7வது சம்பள கமிஷன் டிஏ உயர்வு (7th Pay Commission DA Hike) ஃபார்முலாவின் அடிப்படையில் உயர்வு (DA - DR Hike) அளிக்கப்படும்.

பொதுவாக, மத்திய ஊழியர்களின் அகவிலைப்படி (டிஏ) மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் (டிஆர்) ஆண்டுக்கு இரண்டு முறை திருத்தம் செய்யப்படுகிறது. அதன்படி தற்போது கடைசியாக மார்ச் மாதத்தில் 4 சதவீதம் இவர்களின் டிஏ - டிஆர் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு 38 ஆக இருந்த டிஏ - டிஆர் 42 சதவீதமாக உயர்ந்தது. இம்முறை, டிஏ-டிஆர் 4 சதவீதம் அதிகரித்தால், அது 46 சதவீதமாகவும், அதுவே 3 சதவீத அதிகரிப்பு இருந்தால், 45 சதவீத டிஏ - டிஆர் அளவை எட்டும்.

இந்நிலையில் அகவிலைப்படி (டிஏ) மற்றும் அகவிலை நிவாரணம் (டிஆர்) அதிகரிப்பால் நாட்டின் இருக்கும் 1 கோடி மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நேரடியாக பயனடைவார்கள். இதன் காரணமாக அவரது சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தில் கணிசமான உயர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | 7th Pay Commission பம்பர் செய்தி: 3% அல்ல... 4% டிஏ ஹைக் கிடைக்கும், சம்பளம் எகிறும்.. கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Read More