Home> Business
Advertisement

Gold and Silver Trade: கண்காணிப்பு பட்டியலில் தங்கம் வெள்ளியின் வெளிநாட்டு வர்த்தகம்

Gold & Silver under controlled delivery list: சிறப்பு அதிகாரியின் மேற்பார்வையில் தங்கம் மற்றும் வெள்ளி இறக்குமதி-ஏற்றுமதி நடைபெறும் என்று இந்திய அரசு அறிவித்துள்ளதற்கான காரணங்கள்

Gold and Silver Trade: கண்காணிப்பு பட்டியலில் தங்கம் வெள்ளியின் வெளிநாட்டு வர்த்தகம்

International Trade of Gold and Silver: தங்கம்-வெள்ளி கட்டுப்படுத்தப்பட்ட விநியோக பட்டியலுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், இனி இந்த மதிப்புமிக்க உலோகங்களின் வெளிநாட்டு வர்த்தகத்தில் அரசின் பிடி இறுகுகிறது.

 தங்கம் மற்றும் வெள்ளியின் இறக்குமதி-ஏற்றுமதியானது, சிறப்பு அதிகாரியின் மேற்பார்வையின் கீழ் நடைபெறும். சிறப்பு அதிகாரிக்கு தெரியாமலோ, அவரது மேற்பார்வையின்றி இந்த விலைமதிப்பற்ற உலோகங்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யவோ அல்லது ஏற்றுமதி செய்யவோ முடியாது.

தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமல்ல,ஆபரணங்கள், ரத்தின கற்கள், தங்க நகைகள், போதைப் பொருட்கள், பழங்காலப் பொருட்கள், சிகரெட் போன்றவற்றை அரசு கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்த்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது.

fallbacks

கட்டுப்பாட்டு விநியோகப் பட்டியலுக்கு வந்த பொருட்கள் அனைத்தும் சிறப்பு அதிகாரியின் மேற்பார்வையிலேயே வர்த்தகம் செய்யப்படும். சந்தேகத்திற்கிடமான வகையில் தங்கம் உட்பட கட்டுப்படுத்தப் பட்டியலில் உள்ள பொருட்களின் ஏற்றுமதி  நடைபெறுவதாக நினைத்தால், சம்பந்தப்பட்ட அதிகாரி கண்காணிப்பு சாதனங்களையும் நிறுவலாம்.

புதிய விதியின் கீழ், இந்தியாவில் இருந்து சில பொருட்களை (கட்டுப்படுத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட பொருட்கள்) இறக்குமதி அல்லது ஏற்றுமதி செய்வதற்கு சிறப்பு அதிகாரி ஒப்புதல் அளிக்க முடியும்.

மேலும் படிக்க | அறிமுகமானது நத்திங் ஃபோன்: ஹெட்ஃபோன் ஜாக் இல்லை

சிறப்பு அதிகாரி அத்தகைய ஏற்றுமதிக்கான படிவம்-I இல் அறிக்கையை தாக்கல் செய்வார் மற்றும் சிறப்பு அதிகாரியால் தயாரிக்கப்பட்ட அறிக்கை, அத்தகைய கட்டுப்பாட்டு விநியோகத்திற்கான ஒப்புதலுக்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் முன் வைக்கப்படும்.

சந்தேகத்திற்கிடமான ஷிப்மென்ட் டெலிவரி செய்யப்படும் விதம்

கட்டுப்பாட்டு பட்டியலில் உள்ள பொருட்களை வர்த்தகம் செய்வது தொடர்பாக கண்காணிப்பதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரியின் ஒப்புதலின் பேரில், சிறப்பு அதிகாரி, தேவைப்பட்டால், சந்தேகத்திற்கிடமான ஏற்றுமதிகளைக் கண்காணிக்கும் சாதனங்களை பொருத்தலாம். கட்டுப்பாட்டு விநியோகம் முடிந்ததும், சிறப்பு அதிகாரி அது தொடர்பான அறிக்கையை நியமிக்கப்பட்ட அதிகாரியிடம் சமர்ப்பிக்க வேண்டும்.

சந்தேகத்திற்கிடமான ஏற்றுமதி வேறொரு நாட்டிற்கு அனுப்பப்பட்டால், நியமிக்கப்பட்ட அதிகாரி, துணை ஒழுங்குமுறை (8) இன் கீழ் அறிக்கையைப் பெற்றவுடன், வர்த்தகம் முடிவடைந்தது குறித்து வெளிநாட்டு நாட்டின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் படிக்க | சட்டவிரோதமாக, வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற 51 இலங்கையர்கள் கைது 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Read More