Home> Business
Advertisement

LIC Jeevan Labh: முதலீட்டாளர்களுக்கு சேமிப்பு, வருமானம், பாதுகாப்பை அளிக்கும் சிறந்த திட்டம்

Best LIC Scheme: எல்ஐசி ஜீவன் லாப் திட்டம் ஒரு மிக சிறப்பான திட்டமாகும். இந்தத் திட்டத்தில், சேமிப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டின் பலனும் கிடைக்கும்

LIC Jeevan Labh: முதலீட்டாளர்களுக்கு சேமிப்பு, வருமானம், பாதுகாப்பை அளிக்கும் சிறந்த திட்டம்

Best LIC Scheme: ஆயுள் காப்பீட்டுத் திட்டமான எல்ஐசி நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு பாலிசி நிறுவனமாகும். இதன் கீழ், முதலீட்டாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கைக்குப் பிறகும், அவர்களது குடும்பத்திற்கு வலுவான வருமானம் வழங்கப்படுகிறது. இது எந்த விதமான ஆபத்தும் இல்லாத திட்டம் என்பது மற்றொரு சிறப்பாகும். முதலீட்டில் வலுவான வருமானத்தைப் பெற விரும்பும் முதலீட்டாளர்கள், எல்ஐசியின் இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.

எல்ஐசி ஜீவன் லாப் திட்டம் (LIC Jeevan Labh)

எல்ஐசி ஜீவன் லாப் திட்டம் ஒரு மிக சிறப்பான திட்டமாகும். இந்தத் திட்டத்தில், சேமிப்பு மற்றும் வருமானம் ஆகிய இரண்டின் பலனும் கிடைக்கும். மேலும் கணக்கு வைத்திருப்பவர் இறந்த பிறகு, அவரது குடும்பத்திற்கு 105 சதவீதத்திற்கு மேல் கிடைக்கும். காலத்தைப் பொறுத்து உத்தரவாதம் அளிக்கப்பட்ட தொகை, அதாவது சம் அஷ்யூர்ட் மாறுபடலாம். இது தவிர, கணக்கு வைத்திருப்பவர் முதிர்வு காலத்தில் ரூ.54 லட்சம் பலனைப் பெறுகிறார். எல்ஐசியின் இந்த திட்டம் மிகவும் பிரபலமானது. அதைப் பற்றி விரிவாக அறிந்து கொள்வோம். 

LIC Jeevan Labh: எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும்?

இதற்கு முதலீட்டாளர் ஒவ்வொரு மாதமும் ரூ.7572 அதாவது ஒவ்வொரு நாளும் ரூ.252 முதலீடு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, முதிர்வு காலத்தில் ரூ.54 லட்சம் வருமானம் கிடைக்கும். இது வரையறுக்கப்பட்ட பிரீமியம் மற்றும் இணைக்கப்படாத திட்டமாகும். இந்த பாலிசி, பாலிசிதாரர் இறந்தால் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்குகிறது. இது தவிர, பாலிசி வைத்திருப்பவர் முதிர்வு வரை உயிருடன் இருந்தால், அவருக்கு பெரும் தொகை கிடைக்கும். இந்தத் திட்டத்தின் கீழ், முதலீட்டாளர்கள் தங்கள் விருப்பப்படி பிரீமியத்தின் அளவு மற்றும் கால அளவைத் தேர்ந்தெடுக்க உரிமை உண்டு.

LIC Jeevan Labh: யார் இந்த பாலிசியை எடுக்கலாம்?

இந்த பாலிசியை வாங்க குறைந்தபட்ச வயது 18 ஆகும். ஒரு நபர் 25 வயதில் ஜீவன் லாப் பாலிசியை வாங்கினால், அவர் மாதம் ரூ. 7572 அல்லது நாள் ஒன்றுக்கு ரூ. 252 முதலீடு செய்ய வேண்டும். இந்த வகையில் அவரது ஆண்டு முதலீடு ரூ. 90,867 ஆக இருக்கும்.

மேலும் படிக்க | 4 வகையான ஆதார் அட்டைகளில் எந்த கார்டை எதற்கு பயன்படுத்தலாம்? UIDAI சொல்லும் டிப்ஸ்!

இந்தத் திட்டத்தில் மொத்தம் ரூ. 20 லட்சத்தை முதலீடு செய்வதன் மூலம், முதிர்வுக்குப் பிறகு பாலிசி வைத்திருப்பவர் ரூ.54 லட்சத்தைப் பெறுவார். இதில் பாலிசிதாரருக்கு போனஸ் தொகையும் கிடைக்கும். இந்த தொகை மாறிக்கொண்டே இருக்கும். 

உறுதியளிக்கப்பட்ட தொகை

அரசாங்கத்தின் இந்தத் திட்டத்தின் கீழ், 8 முதல் 59 வயது வரை உள்ள எந்தவொரு குடிமகனும் முதலீடு செய்யலாம். இந்த பாலிசியின் கீழ், பாலிசி வைத்திருப்பவர்கள் 10 முதல் 16 ஆண்டுகள் வரை பணத்தை டெபாசிட் செய்கிறார்கள். 16 வருடங்கள் முதல் 25 வருடங்கள் முதிர்ச்சியில் இவர்களுக்கு பணம் வழங்கப்படும். இதில், 59 வயதுடையவர், 16 ஆண்டுகளுக்கான பாலிசியை தேர்வு செய்யலாம். வயது மட்டும் 75 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இது தவிர, பாலிசி காலத்தின் போது ஏதேனும் காரணத்தால் பாலிசிதாரர் இறந்தால், நாமினி அதன் பலனைப் பெறுவார். நாமினி நிறுவனத்திடமிருந்து போனஸுடன் உறுதியளிக்கப்பட்ட தொகையின் பலனைப் பெறுகிறார். டெத் பெனிஃபிட் இந்த பாலிசியின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்டாக கருதப்படுகிறது.

மேலும் படிக்க | மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% டிஏ ஹைக் இருந்தால், யாருக்கு எவ்வளவு ஊதிய உயர்வு இருக்கும்? கணக்கீடு இதோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Read More